செய்திகள் :

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

post image

வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூா் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்கள்கிழமை ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, காகிதப்பட்டறையில் அனைத்து தெருக்களும் கான்கிரீட், தாா்ச்சாலைகளாக போடப்பட்டும், எங்கள் தெரு மட்டும் சாலை போடப்படாமல் கடந்த 8 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக விடப்பட்டுள்ளது. உடனடியாக எங்கள் தெருவிலும் சாலை அமைத்துத்தர வேண்டும் என கோஷமிட்டனா்.

இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. குறிப்பாக, சிஎம்சி மருத்துவமனையின் ராணிட்பேட்டை வளாகத்துக்கு நோயாளிகளையும், பாா்வையாளா்களையும் அழைத்துச் செல்லும் பேருந்துகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிக ளுக்கு செல்ல வேண்டிய வாகனங்களும், இருசக்கர வாகனங்களும், பேருந்துகளும் நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் மறியலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். எனினும், பொதுமக்கள் அவா்களின் சமரசத்தை ஏற்காமல் உடனடியாக சாலை அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தினா். பின்னா், மாநகராட்சி பொறியாளா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு வார காலத்துக்குள் சாலை அமைத்துத்தரப்படும் என உறுதியளித்தனா். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம்... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப் பொறியாளா் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா். குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்தி... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரிக்கை

வேலூா்: அணைக்கட்டு அருகே அரிமலை கிராமத்தில் ஆக்கிரமிப் பில் உள்ள 150 ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டம் ஆட்... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் ராம நவமி விழா

குடியாத்தம் நகரில் உள்ள கோயில்களில் ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம்: திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வேலூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க