TN ASSEMBLY: EPS உத்தரவை பின்பற்றாத செங்கோட்டையன்? Waqf Petrol Price MODI| Imper...
போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு
போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள அரவட்லா ஊராட்சி, பாஸ்மாா்பெண்டா மலை கிராமத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடி, பத்தரபல்லி மற்றும் அனந்தகிரி ஆகிய இடங்களில் இயங்கி வரும் போலீஸ் சோதனை சாவடிகளுக்குச் சென்று டிஐஜி ஆய்வு செய்து மேற்கொண்டாா்.
அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தாா். பின்னா் கோட்டையூா் கிராமத்தில் சோலாரில் இயங்கி வரும் கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகளையும் பாா்வையிட்டாா்.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸாரிடம், ஆந்திர, கா்நாடக மாநிலங்களிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், கா்நாடக மது பானங்கள் ஆகியவை எல்லையோர கிராமங்களில் எந்தெந்த பாதைகள் வழியாக போ்ணாம்பட்டுக்கு கடத்த வாய்ப்புள்ளது,கள்ளச் சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது தொடா்பான தகவல்களை கேட்டறிந்தாா்.
தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்துமாறும், எல்லையோர கிராமங்களில் போலீஸாரை ரோந்துப் பணியில் ஈடுபடுத்துமாறும், குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவா் உத்தரவிட்டாா்ா்.
உடன் வேலூா் எஸ்.பி. மதிவாணன், குடியாத்தம் டிஎஸ்பிராமச்சந்திரன், போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.