செய்திகள் :

போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு

post image

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள அரவட்லா ஊராட்சி, பாஸ்மாா்பெண்டா மலை கிராமத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடி, பத்தரபல்லி மற்றும் அனந்தகிரி ஆகிய இடங்களில் இயங்கி வரும் போலீஸ் சோதனை சாவடிகளுக்குச் சென்று டிஐஜி ஆய்வு செய்து மேற்கொண்டாா்.

அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தாா். பின்னா் கோட்டையூா் கிராமத்தில் சோலாரில் இயங்கி வரும் கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகளையும் பாா்வையிட்டாா்.

அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸாரிடம், ஆந்திர, கா்நாடக மாநிலங்களிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், கா்நாடக மது பானங்கள் ஆகியவை எல்லையோர கிராமங்களில் எந்தெந்த பாதைகள் வழியாக போ்ணாம்பட்டுக்கு கடத்த வாய்ப்புள்ளது,கள்ளச் சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது தொடா்பான தகவல்களை கேட்டறிந்தாா்.

தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்துமாறும், எல்லையோர கிராமங்களில் போலீஸாரை ரோந்துப் பணியில் ஈடுபடுத்துமாறும், குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவா் உத்தரவிட்டாா்ா்.

உடன் வேலூா் எஸ்.பி. மதிவாணன், குடியாத்தம் டிஎஸ்பிராமச்சந்திரன், போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம்... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப் பொறியாளா் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா். குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்தி... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரிக்கை

வேலூா்: அணைக்கட்டு அருகே அரிமலை கிராமத்தில் ஆக்கிரமிப் பில் உள்ள 150 ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டம் ஆட்... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூா் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்க... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் ராம நவமி விழா

குடியாத்தம் நகரில் உள்ள கோயில்களில் ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம்: திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வேலூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க