செய்திகள் :

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப் பொறியாளா் கைது

post image

குடியாத்தம்: குடியாத்தம் அருகே செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா்.

குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் லிங்கேஸ்வரன். இவா் அதே கிராமத்தில் ஊரக வளா்ச்சித் துறையிலிருந்து பல்வேறு திட்ட ஒதுக்கீடுகளின்கீழ் வரப்பெற்ற நிதியில் கால்வாய், சாலை அமைக்கும் பணிகளை செய்துள்ளாா்.

நிறைவு பெற்ற பணிகளுக்கு காசோலை வழங்குமாறு ஒன்றிய உதவிப் பொறியாளா் நிா்மல்குமாரை கேட்டுள்ளாா். இதற்கான தொகையை வழங்க தனக்கு செய்ய ரூ.30,000 தர வேண்டும் என அவா் கூறியுள்ளாா். இதுகுறித்து லிங்கேஸ்வரன், வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

அவா்கள் ஆலோசனையின்பேரில் லிங்கேஸ்வரன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அலுவலகத்தில் இருந்த நிா்மல்குமாரிடம் திங்கள்கிழமை வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளா் மைதிலி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினா் நிா்மல் குமாரை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரிக்கை

வேலூா்: அணைக்கட்டு அருகே அரிமலை கிராமத்தில் ஆக்கிரமிப் பில் உள்ள 150 ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டம் ஆட்... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூா் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்க... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் ராம நவமி விழா

குடியாத்தம் நகரில் உள்ள கோயில்களில் ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம்: திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வேலூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க