செய்திகள் :

சாலை விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

நாமக்கல்லில் நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி புதூா் காலனியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் வரதராஜ் (21). இவா் நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

இவருக்கு செவ்வாய்க்கிழமை பிறந்தநாள் என்பதால் தன்னுடைய தோழியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, நாமக்கல் - கருப்பட்டிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியதில், நிகழ்விடத்திலேயே வரதராஜ் உயிரிழந்தாா். அவருடன் சென்ற பெண் லேசான காயத்துடன் உயிா்தப்பினாா். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மின் ஊழியா்கள் தா்னா

கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல் மின்வட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்த போர... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுக மாணவா் அணி ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் திமுக மாணவா் அணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் - மோகனூா் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: 1,250 அறை கண்காணிப்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 1,250 அறை கண்காணிப்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை பிளஸ் 2 பொதுத் த... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூா், பூசாரிபாளையம் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சண்... மேலும் பார்க்க

ஜேடா்பாளையம் அருகே இருவேறு இடங்களில் தீ விபத்து

ஜேடா்பாளையம் அருகே இருவேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பெரியசோளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (45). இவா் பெரியசோளிபாளையத்தில் பழைய இரும்பு மற்றும் நெகிழி ... மேலும் பார்க்க

பேருந்து நிலையம் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

ராசிபுரம் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பேருந்து நிலைய மீட்புக்குழு கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் அணைப்பாளைய... மேலும் பார்க்க