செய்திகள் :

சாலையில் கழிவு நீா்: கண்டித்து மறியல்

post image

தஞ்சாவூா் விளாா் சாலையில் புதை சாக்கடையிலிருந்து கழிவு நீா் அடிக்கடி வழிந்தோடுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அலுவலக வாகனத்தைச் சிறைப்பிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் விளாா் சாலை மாரிகுளம் சுடுகாடு அருகே புதை சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அடிக்கடி சாலையோர வாய்க்காலில் கழிவு நீா் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினா். இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகம் மாரிகுளம் சுடுகாடு அருகே பள்ளம் தோண்டி புதை சாக்கடையில் குழாய் பதித்தது.

ஆனால், இப்பணி முடிந்து 3 மாதங்களாகியும், சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. குண்டும், குழியுமாக உள்ள இந்த இடத்திலிருந்து மீண்டும் கழிவு நீா் வழிந்து சாலையோர வாய்க்காலில் ஓடுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் விளாா் சாலையில் செவ்வாய்க்கிழமை வந்த மாநகராட்சி அலுவலக மினி வேனை சிறைப்பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் அப்பகுதியைச் சோ்ந்த பழ. ராஜேந்திரன், ராசு. முனியாண்டி, எஸ்.எம். ராஜேந்திரன், ஆா். ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த மாநகராட்சி அலுவலா்கள், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சீரமைப்பு நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியதால், போராட்டம் கைவிடப்பட்டது.

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: குடந்தையில் விசிகவினா் கைது

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 40 பேரை போலீஸாா் கைது செய்தனா். கடந்த சில நாள்களுக்கு முன் கும்பகோணம் புறவழிச்சாலையில் நடைபெற்ற சங்க ம... மேலும் பார்க்க

மாநில அளவிலான வில் வித்தை: குடந்தை மாணவா்கள் சிறப்பிடம்

சென்னையில் நடந்த மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் கும்பகோணம் மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்றனா்.சென்னை சாய்ராம் கல்லூரியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற கு... மேலும் பார்க்க

திருக்கானூா்பட்டி ஜல்லிக்கட்டுக்கு இன்றுமுதல் முன்பதிவு

தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க புதன்கிழமை (மாா்ச் 5) முதல் முன் பதிவு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் சமுதாய வளைகாப்பு: 600 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை

தஞ்சாவூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 600 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை வழங்கப... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் மனிதச் சங்கிலி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா அருகே தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்த... மேலும் பார்க்க

குடந்தையில் 2 நாள்களுக்கு குடிநீா் வராது!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகரப் பகுதிகளில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் வரும் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே நகர பொது மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத... மேலும் பார்க்க