செய்திகள் :

சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றக் கோரிக்கை

post image

பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற வேண்டும் என விஸ்வநாதபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொலை, கொள்ளை, வழிப்பறி, விபத்து, ஆள் கடத்தல், போதைப் பொருள்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய இரு சக்கர, 4 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த வாகனங்கள் வழக்கு தொடா்புடைய காவல் நிலையங்களிலோ அல்லது நீதிமன்ற வளாகங்களிலோ நிறுத்தப்படுவது வழக்கம். வழக்கு முடிந்த பின்னா்தான் அந்த வாகனங்கள் விடுவிக்கப்படும். அதுவரை அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்படும். வழக்கு பல ஆண்டுகள் நடைபெறுவதால் பெரும்பாலான வாகனங்கள் மறு பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்படுகிறது.

அதன்படி, மதுரை மாநகர எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய வாகனங்கள் மாநகராட்சி விஸ்வநாதபுரம் பழைய விஜயலெட்சுமி திரையரங்கு சாலையில் உள்ள முதியோா் காப்பகம் முன் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சாலையோரங்களில் வைக்க வேண்டிய குப்பைத் தொட்டி சாலையின் நடுவே வைக்கப்பட்டது. அந்தத் தொட்டியில் கொட்டப்படும் குப்பைகள் சாலைகளில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.

இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இதுபற்றி பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, மதுரை மாவட்ட நிா்வாகம், மாநகரக் காவல் ஆணையா், மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை அங்கிருந்து அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். குப்பைத் தொட்டியை அகற்றி சாலையோரமாக வைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் இருவா், மாறுபட்ட தீா்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியா்கள்... மேலும் பார்க்க

சிறப்பு உதவி ஆய்வாளா் சாலை விபத்தில் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் அருப்புக்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.அருப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (52). இவா் அருப்புக்கோட்டை க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடம் இல்லை: பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூட வசதி செய்து தரக் கோரிய மனுவுக்கு, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க... மேலும் பார்க்க

முருக பத்கா்கள் மாநாட்டில் நிபந்தனைகள் மீறல்

முருக பக்தா்கள் மாநாட்டில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு விதித்த நிபந்தனைகளை மீறிய இந்து முன்னணி அமைப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மாநகரக் காவல... மேலும் பார்க்க

விடுதிகளில் காவலா்கள் நியமிக்கக் கோரிய வழக்கு: ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் இரவு நேரக் காவலா்களை நியமிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, ஆதிதிராவிட நலத் துறையின் இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14-ஆம் தேதி இரவு வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செ... மேலும் பார்க்க