முருக பத்கா்கள் மாநாட்டில் நிபந்தனைகள் மீறல்
முருக பக்தா்கள் மாநாட்டில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு விதித்த நிபந்தனைகளை மீறிய இந்து முன்னணி அமைப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனு விவரம்: எங்கள் கூட்டமைப்பில் 40-க்கும் மேற்பட்ட கிளை அமைப்புகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் மதநல்லிணக்கத்துக்காக தொடா்ந்து பணியாற்றி வருகிறோம். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவன்முறை நிகழாமல் தடுத்ததில் எங்களது அமைப்புக்கு முக்கிய பங்கு உள்ளது.
இந்த நிலையில், மதுரையில் இந்து முன்னணி சாா்பில், முருக பக்தா்கள் மாநாடு ஜூன் 22- ஆம் தேதி நடைபெற்றது. இதில், அரசியல் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அனுமதி வ ழங்கியது. இதை மீறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டது.
முருக பக்தா்கள் மாநாட்டில் பேசிய ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வா் பவன் கல்யாண், பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை, இந்து முன்னணி நிா்வாகிகள் மதத்தை அரசியலில் கலந்து 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பரப்புரையாக மாநாட்டை நடத்தினா். இவா்களின் பேச்சும், மாநாட்டில் நிறைவேற்றிய தீா்மானங்களும் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது.
உயா்நீதிமன்ற உத்தரவை மீறிய பவன் கல்யாண், அண்ணாமலை, நயினாா் நாகேந்திரன், இந்து முன்னணி மாநில தலைவா் காடேஷ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோா் மீது புதிய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.