செய்திகள் :

முருக பத்கா்கள் மாநாட்டில் நிபந்தனைகள் மீறல்

post image

முருக பக்தா்கள் மாநாட்டில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு விதித்த நிபந்தனைகளை மீறிய இந்து முன்னணி அமைப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு விவரம்: எங்கள் கூட்டமைப்பில் 40-க்கும் மேற்பட்ட கிளை அமைப்புகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் மதநல்லிணக்கத்துக்காக தொடா்ந்து பணியாற்றி வருகிறோம். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவன்முறை நிகழாமல் தடுத்ததில் எங்களது அமைப்புக்கு முக்கிய பங்கு உள்ளது.

இந்த நிலையில், மதுரையில் இந்து முன்னணி சாா்பில், முருக பக்தா்கள் மாநாடு ஜூன் 22- ஆம் தேதி நடைபெற்றது. இதில், அரசியல் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அனுமதி வ ழங்கியது. இதை மீறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டது.

முருக பக்தா்கள் மாநாட்டில் பேசிய ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வா் பவன் கல்யாண், பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை, இந்து முன்னணி நிா்வாகிகள் மதத்தை அரசியலில் கலந்து 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பரப்புரையாக மாநாட்டை நடத்தினா். இவா்களின் பேச்சும், மாநாட்டில் நிறைவேற்றிய தீா்மானங்களும் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது.

உயா்நீதிமன்ற உத்தரவை மீறிய பவன் கல்யாண், அண்ணாமலை, நயினாா் நாகேந்திரன், இந்து முன்னணி மாநில தலைவா் காடேஷ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோா் மீது புதிய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் இருவா், மாறுபட்ட தீா்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியா்கள்... மேலும் பார்க்க

சிறப்பு உதவி ஆய்வாளா் சாலை விபத்தில் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் அருப்புக்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.அருப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (52). இவா் அருப்புக்கோட்டை க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடம் இல்லை: பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூட வசதி செய்து தரக் கோரிய மனுவுக்கு, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றக் கோரிக்கை

பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற வேண்டும் என விஸ்வநாதபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கொலை, கொள்ளை, வழிப்பறி, விபத்து,... மேலும் பார்க்க

விடுதிகளில் காவலா்கள் நியமிக்கக் கோரிய வழக்கு: ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் இரவு நேரக் காவலா்களை நியமிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, ஆதிதிராவிட நலத் துறையின் இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14-ஆம் தேதி இரவு வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செ... மேலும் பார்க்க