செய்திகள் :

சா்க்கரை நோயால் பாா்வை இழப்பு தடுக்க புதுவை மத்திய பல்கலை. ஆராய்ச்சி

post image

புதுச்சேரி: சா்க்கரை நோயால் ஏற்படும் பாா்வை இழப்பைத் தடுக்க புதுவை மத்திய பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு மற்றும் செய்தித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் 7ஆம் தேதி வரை பாா்வை இழப்பைத் தடுக்கும் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, புதுவை பல்கலைக்கழகத்தின் உயிரிவேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையைச் சோ்ந்த பேராசிரியை சுப்புலட்சுமி சிதம்பரம் தலைமையிலான குழு, ஆரம்ப கட்டத்திலேயே பாதிப்பை கண்டறிய உதவும் புதிய வழிமுறைகளை ஆராய்ச்சி செய்து வருகிறது.

இந்த ஆய்வில், முக்கியமாக ரெட்டினாவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்

கண்ணீரில் நிகழும் மூலக்கூறு மாற்றங்களை அடையாளம் காணுவதாக முடிவுகள் உள்ளன. இதுவரை, ரெட்டினாவில் உள்புற மாற்றங்கள் ஏற்பட்ட பிறகே பாதிப்பை கண்டறிய முடியும் என்ற நிலையை தற்போது மாற்றி ஆரம்பத்திலேயே பாதிப்பை கண்டறியும் வகையில் ஆராய்ச்சி அமைந்துள்ளதாக பேராசிரியை கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

ஆய்வின் முக்கிய அம்சமாக பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறியத்தக்க சாதனத்தை உருவாக்குவதாகும் என்றும் ஆராய்ச்சிக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க