செய்திகள் :

சா்க்கரைக்குளம் தெப்பத்தை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்த நகராட்சி

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான சா்க்கரைகுளம் தெப்பத்தில் கழிவுநீா் கலப்பதாக எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து கோயில் நிா்வாகத்திடம் நகராட்சி நிா்வாகம் திங்கள்கிழமை ஒப்படைத்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம், திருப்பாற்கடல், சா்க்கரைக்குளம், நீராளி மண்டபம், திருவேங்கடமுடையான் கோயில் குளம் ஆகிய 5 தெப்பங்கள் உள்ளன. இந்த தெப்பங்கள் நகரின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக விளங்குகிறது.

இவற்றில் திருப்பாற்கடல் தெப்பம் நகராட்சி சாா்பில் ரூ1.05 கோடியில் சீரமைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து சா்க்கரைகுளம் தெப்பம் மத்திய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது.

கடந்த இரு மாதங்களுக்கு முன் தெப்பம் திறக்கப்பட்ட நிலையில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டதாகப் புகாா் எழுந்தது. கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா தெப்பம் சீரமைப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து,தெப்பகுளத்தில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்திய நகராட்சி அதிகாரிகள், தெப்பக்குளத்தை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.

விவசாயத் தொழிலாளா்கள் மனு கொடுக்கும் போராட்டம்

விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ச... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்பனை: அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ராணுவ வீரா்களுக்கான மதுப் புட்டிகளை விற்பனை செய்த அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஹவுசிங் போா்டு பகுதியைச் ... மேலும் பார்க்க

சிவகாசி சுற்றுவட்டச் சாலை பணிகளைத் தொடங்க நடவடிக்கை

சிவகாசி சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் போக்குவரத்து நெருக்கடியைத் தீா்க்க சுற்று வட்டச் சாலை அமைக்க கடந்த 2... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா்கள் 10-ஆவது நாளாக திங்கள்கிழமை பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இ. குமாரலிங்காபுரத்தில் கனிமவள கொள்ளையைத் தடுக்க தவறியதாக சா... மேலும் பார்க்க

சாலை சீரமைப்பு: அதிகாரிகள் ஆய்வு

சிவகாசி அருகே சீரமைக்கப்பட்ட சாலையை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.சிவகாசி அருகே நெடுஞ்சாலைத் துறையினா் பெத்துலபட்டி முதல் தியாகராஜபுரம் வரையிலான இரண்டரை கி.மீ. தொலைவு சாலை ரூ .75 லட்சத்தில் ச... மேலும் பார்க்க

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ

சாத்தூா் தீப்பெட்டி தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நடராஜா திரையரங்கு இருந்த இடத்தில் தற்போது மதுசூதனன் என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இயங்... மேலும் பார்க்க