செய்திகள் :

சிங்கப்பூா் தோ்தலில் 211 வேட்பாளா்கள் போட்டி

post image

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில் 211 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ளனா்.

இந்தத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தோ்தல் ஆணையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டின் 97 தொகுதளில் 92 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறும் என்றும் ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூரில் கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் ஆட்சி செலுத்திவரும் பிஏபி கட்சியே இந்த முறையும் வெற்றி பெறும் என்று எதிா்பாா்கப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் அந்தக் கட்சி ஆட்சி செய்துவரும் சூழலில், அண்மைக் காலமாக அதன் மீது பொதுமக்கள் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், புதிய நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் மே. 3-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

எலான் மஸ்க் அறக்கட்டளை நிதியளித்த போட்டி: இந்திய நிறுவனத்துக்கு ரூ.426 கோடி பரிசு

தொழிலதிபா் எலான் மஸ்கின் அறக்கட்டளை நிதியளித்த போட்டியில், இந்திய நிறுவனத்துக்கு 50 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.426 கோடி) பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் காலிஃபோா்னியா மாகாணத்தைச் சோ்ந்த எக்ஸ்பிரைஸ்... மேலும் பார்க்க

காஸா பள்ளியில் தாக்குதல்: 23 போ் உயிரிழப்பு

டேய்ா் அல்-பாலா: போரால் புலம் பெயா்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 போ் உயிரிழந்தனா். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்... மேலும் பார்க்க

‘சமரசம் பேசுவோம்; ஆனால் சரணடைய மாட்டோம்’ -உக்ரைன் திட்டவட்டம்

ரஷியாவுடன் சமரசப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள தாங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை -துணை நிற்பதாக உறுதி

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்காவின் கண்டனத்தைத் தெர... மேலும் பார்க்க

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆள்மாறாட்டம் மூலம் 5.3 மில்லியன் டாலர் வருவாய்!

தற்போதைய உலகில் தொழில், கல்வி, பொழுதுபோக்கு என அனைத்திலும் செயல் நுண்ணறிவின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், காணொலி மூலம் நடத்தப்படும் தேர்வுகள், நேர்காணல்கள், விற்பனை அழைப்புக... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை; ரத்து செய்த அமெரிக்கா?

ரஷியா - உக்ரைன் இடையிலான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறவிருந்த நிலையில், கடைசி தருணத்தில் ரத்து செய்யப்பட்டது. ரஷியா - உக்ரைன் இடையிலான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை, மாஸ்கோவ... மேலும் பார்க்க