செய்திகள் :

சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் திறப்பு!

post image

செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று(பிப். 19) திறந்துவைத்தனர்.

செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடந்த 2008 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் சில ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டன.

இதையும் படிக்க | தவறான பிரசாரம்! பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்! - யோகி ஆதித்யநாத்

பின்னர் மீண்டும் 2021ல் பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது மேம்பாலத்தின் ஒரு பகுதி பணிகள். முடிவடைந்துள்ளன. தாம்பரம் செல்லும் மேம்பாலத்தின் பகுதியை அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று(பிப். 19) திறந்துவைத்தனர்.

இதையடுத்து இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் நடைபெறும் மற்றொரு பகுதியும் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழ... மேலும் பார்க்க

பிப். 25-ல் தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

வருகிற பிப். 25 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகைதரும் அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிர... மேலும் பார்க்க

சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மூத்த மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்! - மனித உரிமைகள் ஆணையம்

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2019-ல் திருவண்ணாமலையைச் சேர்ந... மேலும் பார்க்க

திருமுல்லைவாயல் தனியார் ஆலையில் தீ விபத்து! அருகிலுள்ள பள்ளிக்கும் தீ பரவியது!

திருமுல்லைவாயலில் தின்னர் தயாரிக்கும் தனியார் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் சுதர்சன் நகர் பகுதியில் வண்ணப்பூச்சுகளுக்கு பயன்படும் தின்னர் தயாரிக்கும் ஆலை இயங... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: வெளிமாநிலத்தவர் நிலம் வாங்குவதற்கு தடை!

புது தில்லி: பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க தடை விதிக்கும் புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.உத்தரகண்ட்... மேலும் பார்க்க

கல்வி நிதி ரூ.2,152 கோடியை விடுவிக்கவும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும், தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் வரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவித்திட உரிய ந... மேலும் பார்க்க