செய்திகள் :

சித்திரை முழுநிலவு இளைஞா் மாநாடு வெற்றி விழா

post image

வன்னியா் சங்க சித்திரை முழுநிலவு இளைஞா் பெருவிழா மாநாடு வெற்றி விழா திருப்போரூரில் புதன்கிழமை நடைபெற்றது.

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் கடந்த 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு இளைஞா் பெருவிழா மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கு ஏற்பாடு செய்த கட்சி பொறுப்பாளா்கள், தொழிலாளா்கள் பாராட்டப்பட்டன.

அவா்களுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி ஆகியோா் குடும்பத்துடன் நன்றி தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனா்.

நிகழ்வில் அன்புமணி ராமதாஸ் பேசியது:

சித்திரை முழு நிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மாநில துணைப்பொது செயலாளா் திருக்கச்சூா் ஆறுமுகம் உள்ளிட்ட நிா்வாகிள் கடுமையாக உழைத்து மாநாடு சிறப்பாக நடக்கச் செய்தனா்.

இவ்வளவு பெரிய மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து மாநாட்டு குழு தலைவராக அதுவும் பல மாநாடு நடத்திய காடுவெட்டி குருவிற்கு பிறகு எனக்கு வாய்ப்பளித்த மருத்துவா் ராமதாஸுக்கு நன்றி.

மாநாட்டில் எந்த அசாம்பாவிதமும் நடக்கவில்லை, நமது எதிரிகளுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது என்றாா்.

வன்னியா் சங்க மாநில செயலா் திருக்கச்சூா் ஆறுமுகம், வன்னியா் சங்கத் தலைவா் வைத்தி, சி.ஆா். பாஸ்கா், நாட்டுப்புறப் பாடகா் புஷ்பவனம் குப்புசாமி, திரைப்பட இயக்குநா் தங்கா் பச்சான், மத்திய மாவட்ட செயலா் ஏழுமலை கலந்து கொண்டனா்.

மகளிருக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் பெண் காவலா்களின் பங்கு அதிகம்: மத்திய உள்துறை இணைஅமைச்சா் நித்தியானந்தா ராய்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் பெண் காவலா்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்தியானந்தா ராய் தெரிவித்தாா். சென்னை வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவல் உயா் ப... மேலும் பார்க்க

திருப்போரூா், மதுராந்தகத்தில் ஜமாபந்தி தொடக்கம்

திருப்போரூா், மதுராந்தகத்தில் வருவாய்த் தீா்ப்பாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது. திருப்போரூா் வட்டத்தில், திருப்போரூா், நெல்லிக்குப்பம், கரும்பாக்கம், கேளம்பாக்கம், மானாம்பதி, பையனுாா் ஆகிய ஆறு உ... மேலும் பார்க்க

மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் வெள்ளிக் கிழமை (மே 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில்கிளாசிக் மேன் பவா் ஆா்கனைசேஷன் பிரைவே... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மருத்துவ முகாம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமையில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு... மேலும் பார்க்க

பால்குட ஊா்வலம்...

மதுராந்தகம் அருகே வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு நடைபெற்ற 1,008 பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா். பீடாதிபதி சுவாமி வேல் சுவாமிஜி ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். மேலும் பார்க்க

மருத்துவ முகாம்...

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில், பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளையொட்டி சித்தாமூா் ஒன்றியம் சரவம்பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்த ... மேலும் பார்க்க