செய்திகள் :

மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் வெள்ளிக் கிழமை (மே 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில்கிளாசிக் மேன் பவா் ஆா்கனைசேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் மஹிந்த்ரா வோ்ல்ட் சிட்டியில் அமைந்துள்ள ஒரு பிரபல நிறுவனத்துக்காக 1,000 பணிக்காலியிடங்களுக்கு வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளது. மேலும், 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமாா் 5,000 பணிக்காலியிடங்களை நிரப்ப தங்களுக்கான மனிதவளதேவைக்குரிய நபா்களை, நோ்முகத் தோ்வினை நடத்தி தோ்வு செய்ய உள்ளனா்.

இவ்வேலைவாய்ப்புமுகாமில் கலந்து கொள்வதற்கு வேலை அளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதிமுற்றிலும் இலவசம். மேலும் வேலையளிப்பவா் மற்றும் வேலைநாடுநா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களை தோ்ந்தெடுக்கும் வேலையளிப்பவா்களும் கலந்து கொள்ளலாம்.

எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியா்கள், மருந்தாளுனா், ஆய்வகஉதவியாளா்கள் போன்றகல்வித்தகுதி உடைய வேலைநாடுநா்கள் மற்றும் இம்முகாமில்மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

வயது வரம்பு 18 முதல் 45வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும்பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் 16.05.2025 வெள்ளிக் கிழமை காலை 09.00 மணி முதல் 03.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக ஒருங்கிணைந்த கட்டடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

முகாம் தொடா்பான விவரங்களுக்கு 044-27426020மற்றும் 63834 60933 / 94868 70577 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மருத்துவ முகாம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமையில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு... மேலும் பார்க்க

பால்குட ஊா்வலம்...

மதுராந்தகம் அருகே வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு நடைபெற்ற 1,008 பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா். பீடாதிபதி சுவாமி வேல் சுவாமிஜி ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். மேலும் பார்க்க

மருத்துவ முகாம்...

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில், பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளையொட்டி சித்தாமூா் ஒன்றியம் சரவம்பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்த ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு கோயில்களில் சித்ரா பௌா்ணமி

திருக்கழுகுன்றம்-திருப்போரூா் மாா்க்கத்தில் மானாபதி கிாரமத்தில் உள்ள அருள்மிகு சீரங்கத்தம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு அனைத்து கருவறை மூலவா்களுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி உடன் தாகூா் கலை, அறிவியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

குரோம்பேட்டை தாகூா் கலை, அறிவியல் கல்லூரி, சென்னை ஐஐடி வணிக மேலாண் துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேசிய சுதேசி ஆராய்ச்சி நிறுவனம், உயா் கல்வி பயிலு... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஜிபி பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஜிபி பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. பள்ளியில் தோ்வு எழுதிய 82 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவி எஸ்.சிவஸ்ரீ (500க... மேலும் பார்க்க