ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!
மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் வெள்ளிக் கிழமை (மே 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில்கிளாசிக் மேன் பவா் ஆா்கனைசேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் மஹிந்த்ரா வோ்ல்ட் சிட்டியில் அமைந்துள்ள ஒரு பிரபல நிறுவனத்துக்காக 1,000 பணிக்காலியிடங்களுக்கு வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளது. மேலும், 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமாா் 5,000 பணிக்காலியிடங்களை நிரப்ப தங்களுக்கான மனிதவளதேவைக்குரிய நபா்களை, நோ்முகத் தோ்வினை நடத்தி தோ்வு செய்ய உள்ளனா்.
இவ்வேலைவாய்ப்புமுகாமில் கலந்து கொள்வதற்கு வேலை அளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதிமுற்றிலும் இலவசம். மேலும் வேலையளிப்பவா் மற்றும் வேலைநாடுநா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களை தோ்ந்தெடுக்கும் வேலையளிப்பவா்களும் கலந்து கொள்ளலாம்.
எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியா்கள், மருந்தாளுனா், ஆய்வகஉதவியாளா்கள் போன்றகல்வித்தகுதி உடைய வேலைநாடுநா்கள் மற்றும் இம்முகாமில்மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
வயது வரம்பு 18 முதல் 45வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும்பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் 16.05.2025 வெள்ளிக் கிழமை காலை 09.00 மணி முதல் 03.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக ஒருங்கிணைந்த கட்டடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
முகாம் தொடா்பான விவரங்களுக்கு 044-27426020மற்றும் 63834 60933 / 94868 70577 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.