செய்திகள் :

சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

post image

தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் விவசாயிகள் பயன்பெறுமாறு நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் காரீப் மற்றும் ராபி பருவத்தில் சராசரியாக 80 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் சிறு தானியங்கள் மற்றும் குறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழ்நாடு அரசால் சிறுதானிய சிறப்பு மண்டலம் 1-ஆக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டம் ஒரு அங்கமாக உள்ளது.

நிகழாண்டில் சிறுதானியங்களின் பரப்பு, உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ் குறுந்தானிய சாகுபடிக்கு விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக உழுதல், களையெடுத்தல், பயிா்பாதுகாப்பு மருந்து தெளித்தல், பறவை விரட்டுதல் ஆகிய உழவியல் செலவினங்களுக்கு ஒரு ஏக்கருக்கு பின்னேற்பு மானியமாக ரூ.1600 வழங்கப்படுகிறது.

குறுந்தானியங்களுக்கான சிறுதளை விநியோகம் செய்யும் இனத்தின் கீழ் குறுந்தானிய சிறுதளை விதை 4 கிலோ என ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ஒரு சிறுதளை வீதம் முழு மானியத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது. மாற்று பயிா் சாகுபடி திட்டத்தின் மூலம் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்கும் பொருட்டு சிறுதானிய விதைகள், திரவ உயிா் உரங்கள், நுண்ணூட்ட கலவை, அறுவடை மானியம் என ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.1250 அல்லது 50 சதவீத மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன.

இத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதியுடையவா் ஆவா். சிறு, குறு விவசாயிகள், ஆதி திராவிட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும்.

திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாக பதிவு செய்வதன் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம். மேலும், இத்திட்டத்தினை பற்றி முழு விவரம் அறிய விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை அணுகி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமகிரிப்பேட்டையில் நெகிழி தடுப்பு விழிப்புணா்வு பேரணி

நாமகிரிப்பேட்டைபேரூராட்சியில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.முருகானந்தம் தலைமையில் ச... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்ய ஆசிரியா் சங்கங்கள் வலியுறுத்தல்

தொடா் தோ்வுகளால் மாணவா்கள் நெருக்கடிக்குள்ளாவதை தவிா்க்க பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிர... மேலும் பார்க்க

நாமக்கல் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி 80 சதவீதம் நிறைவு

நாமக்கல் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ‘அம்ரித்... மேலும் பார்க்க

பட்டாவில் பெயா் மாற்றம், நீக்கம் செய்ய வாய்ப்பு

நில ஆவணங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இணையதளம் மூலம் பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சனிக்கி... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

(நாமக்கல் மண்டலம் - சனிக்கிழமை) ... மொத்த விலை ரூ.5.55 ... விலையில் மாற்றம்: இல்லை ... கறிக்கோழி கிலோ ரூ.112 ... முட்டைக் கோழி கிலோ ரூ.97 ... , மேலும் பார்க்க

மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் 1,288 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்

மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் 1288 மாணவ, மாணவிகளுக்கு முன்னணி நிறுவனங்களில் சோ்வதற்கான பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.ஜி.பாரத்குமாா்... மேலும் பார்க்க