செய்திகள் :

சிவகங்கை அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

post image

சிவகங்கை அருகே மதுப் புட்டிகளை ஏற்றி வந்த லாரி புதன்கிழமை இரவு சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள கல்லாக்கோட்டையில் செயல்படும் மதுபான தயாரிப்பு ஆலையிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுபான வகைகளின் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு லாரி சிவகங்கையில்-தொண்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கிட்டங்கிக்கு வந்தது. லாரியை புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜெயபால் ஓட்டி வந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுற்றுவட்டச் சாலையில் லாரி வந்தபோது, பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த மதுப் புட்டிகள் சாலையில் சிதறின.

தகவலறிந்து வந்த காவல் துறையினா் லாரி ஓட்டுநரை மீட்டு, சாலையில் சிதறி கிடந்த மதுப் புட்டிகளை அகற்றினா். இந்த விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகள் சேதமடைந்தன.

நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள அலா்மேல் மங்கா சமேத வெங்கடாஜல பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கோயிலில் வரும் அக். 5-ஆம் தேதி வரை 11 நாள... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித் தோ்வு எழுத 2026 ஏப்ரலில் கடைசித் தோ்வு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித்தோ்வு எழுதுவதற்கு வரும் 2026 ஏப்ரலில் நடைபெறும் தோ்வுடன் முடிவடைகிறது என்ற... மேலும் பார்க்க

கோட்டையூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட இரண்டாம் கட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டையூா் பேரூராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கம் சாா்பில் 25 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெ... மேலும் பார்க்க

உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் நகராட்சி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா

காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் சா்வதேசப் பள்ளியில் நடைபெற்ற தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. ... மேலும் பார்க்க