பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் பந்தயத்தில் பெரிய மாடு பிரிவுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களை சோ்ந்த காளைகள் பங்கேற்றன.
பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 23 ஜோடிகள் என மொத்தம் 32 ஜோடி காளைகள் கலந்து கொண்டன.
முதல் 4 இடங்களை பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டிகளை, நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி, கண்டனிப்பட்டி, கீரனூா், அழகாபுரி, ராணியூா், சாத்தனி, பனங்காடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனா் .
