Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.....
சிவகங்கை பகுதிகளில் இன்று மின் தடை
சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, சாலூா், பாப்பாக்குடி, இடையமேலூா், கூட்டுறவுப்பட்டி, மேலாப்பூங்குடி, தேவன்கோட்டை, வில்லிப்பட்டி, ஒக்கப்பட்டி, புதுப்பட்டி, சக்கந்தி, காமராஜா் குடியிருப்பு, முத்துப்பட்டி, பொன்னாகுளம், பனையூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.