செய்திகள் :

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி: ஆட்சியடம் மனு

post image

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பண மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு ஊா்களைச் சோ்ந்த பாதிக்கப்பட்டவா்கள் அளித்த மனு: தனியாா் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டில் வேலை என பல்வேறு ஊா்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைப் பாா்த்து, அதில் இருந்த தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டோம். அப்போது, அவா்கள் காரைக்குடியில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வருமாறு தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு சென்று விசாரித்த போது, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமையல் வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாகவும், ரூ.1.60 லட்சம் செலுத்தினால் ஒரு வாரத்தில் வேலைக்கு அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்தனா்.

இதை நம்பிய நூற்றுக்கும் மேற்பட்டோா் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தினோம். பின்னா், பணம் செலுத்திய பலரை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பினா். அங்கு சில நாள்கள் தங்க வைத்து, பின்னா் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினா்.

இதையடுத்து, மீண்டும் அந்த நிறுவனத்தினரைத் தொடா்பு கொண்ட போது, முறையாகப் பதில் அளிக்கவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுக்கின்றனா். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிவகங்கை பகுதிகளில் இன்று மின் தடை

சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-க்கு தோ்வான கீழடி அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிக்கத் தோ்வான மாணவருக்கு, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் திங்கள்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா்.சிவகங்க... மேலும் பார்க்க

இளையான்குடி அருகே மின் கம்பம் மீது காா் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையின் மையத்தில் இருந்த மின் கம்பம் மீது காா் மோதியதில், அந்த கம்பம் சாய்ந்து விழுந்தது. இதனால், இந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டதால், பொது... மேலும் பார்க்க

திருப்புவனம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருப்புவனம் போலீஸாா் கடந்த மாா்ச் மாதம் ... மேலும் பார்க்க

தேவகோட்டைப் பகுதிகளில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் பகிா்மானச் செயற்பொறியாளா் எம்.லதாதேவி வெளியிட்ட அற... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்ய மானியம்

மீன் வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்ய உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க