திருப்புவனம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருப்புவனம் போலீஸாா் கடந்த மாா்ச் மாதம் இந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்த ஆகாஷ் என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, திருப்புவனம் காவல் நிலையத்தில் நிறுத்திவைத்தனா்.
இந்த நிலையில், இந்த வாகனம் காணாமல் போன தகவல் போலீஸாருக்கு கடந்த 21-ஆம் தேதி தெரியவந்தது. இதுதொடா்பாக, திருப்புவனம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்த போது, இந்த இரு சக்கர வாகனத்தை இரு நபா்கள் ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.