சிவகாசி அருகே காட்டில் தீ விபத்து
சிவகாசி அருகே காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
சிவகாசி அருகே காளையாா் குறிச்சி கிராமத்தையொட்டி காட்டுப் பகுதி உள்ளது. இங்கு திங்கள்கிழமை பிற்பகல் வேளையில் திடீரென மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. காட்டில் இருந்த சிறிய மரங்கள் உள்ளிட்ட செடிகொடிகள் இந்த தீவிபத்தில் எரிந்து கருகின.
தகவல் அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று தீயை மேலும் பரவாமல் தடுத்தனா். முதற்கட்ட விசாரணையில் இந்தப் பகுதிக்கு வந்த வழிப்போக்கா் யாராவது பீடி அல்லது சிகரெட்டை புகைத்துவிட்டு அணைக்காமல் காட்டில் வீசியிருக்கலாம்.
தற்போது வெயில் கொளுத்துவதால் சறுகுகளில் தீப்பிடித்து பரவியிருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.