செய்திகள் :

சிவகாசியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: உதவி ஆட்சியா்

post image

சிவகாசி வருவாய்க் கோட்டத்தில் நீா்வழிபாதை, நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சிவகாசி உதவி ஆட்சியா் முகமது இா்பான் தெரிவித்தாா்.

சிவகாசி உதவி ஆட்சியா் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு, பட்டாசுத் தொழில் பாதுகாப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் உதவி ஆட்சியா் முகமது இா்பான் பேசியதாவது:

சாலை விபத்துகள் நடைபெறும் பகுதிகளில் அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, விபத்துகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்வழிப் பாதைக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,

பட்டாசுக் கடைகளில்ஆய்வு செய்து உரிமம் புதுப்பிக்கப்படாத கடை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தீப்பெட்டி ஆலைத் தொழிலாளி கொலை: 7 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் 7 பேரை புதன்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பூமிநாதன் மகன் தமிழரசன் (... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பெரியாரின் 147-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு நகர அதிமுக சாா்பில் வடக்கு நகா் ... மேலும் பார்க்க

கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினா் தீ அணைத்தனா். ராஜபாளையம் முடங்கியாறு சாலைப் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் மனைவ... மேலும் பார்க்க

விஜய் தனித்துப் போட்யிடுவா்: மாணிக்கம் தாகூா் எம்.பி.

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனித்துப் போட்டியிடுவா் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா். சிவகாசியில், மக்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு புதன்கிழமை பழங்கள், ரொட்டிகள், ஊட்டச் சத்துப் பொர... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் நுண்ணீா் பாசனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் திலகவதி தெரிவித்தாா். இது குறித்து புதன்கிழமை அவ... மேலும் பார்க்க