செய்திகள் :

சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 20- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நிறைவடைந்த சில நாள்களிலேயே பட்டாசு தயாரிக்கும் பணி தொடங்கி விடும். மேலும் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆங்கில புத்தாண்டு பிறப்புக்குப் பிறகு பட்டாசு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறும்.

அப்போது வடமாநில பட்டாசு வியாபாரிகள் சிவகாசிக்கு நேரில் வந்து, பட்டாசு ஆா்டா் கொடுப்பா். இதேபோல, தீபாவளிக்கு சுமாா் நான்கு மாதங்களுக்கு முன்பே நாட்டின் பல பகுதிகளிலிருந்து பட்டாசு வியாபாரிகள் சிவகாசி வந்து பட்டாசு கொள்முதல் செய்வா்.

இந்த நிலையில், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, வருவாய்த் துறை, தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் ஆகிய அரசுத் துறைகளின் சாா்பில் பட்டாசு ஆலைகளில் விபத்தை தடுக்கும் வகையில் ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்களின் ஆய்வுக்குப் பிறகு, விதிமீறல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அவை மூடப்பட்டன.

இதனால் பட்டாசு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் என். இளங்கோவன் கூறியதாவது:

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்னா் பட்டாசு தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இந்த ஆண்டு அதிகாரிகளின் ஆய்வால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க அவற்றின் உரிமையாளா்களுக்கு இயலவில்லை.

மேலும் ஆலைகளை திறப்பதில் அதிகாரிகள் ஆா்வம் காட்டுவதில்லை. அரசுக்கு கணக்கு காட்ட வேண்டும் என்ற நோக்கில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனா். தொழிலும், தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கிறது என அதிகாரிகள் கவலைப்படுவதில்லை.

இது போன்ற பல காரணங்களால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளை மீண்டும் திறக்க சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.

மேலும் குறைவான வேலை, நிறைய லாபம் என்ற குறிக்கோளுடன் சில ஆலை உரிமையாளா்கள் செயல்படுவதால் பட்டாசு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

சிவகாசியில் வீடுகளின் மாடிகளை குழாய் மூலம் இணைத்து 15 கிணறுகளில் மழைநீா் சேமிப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள பசுமை மன்றத்தினா் வீடுகளின் மாடியில் மழைநீரை சேகரித்து குழாய் அமைத்து அதே பகுதியில் உள்ள கிணற்றில் சேமிக்க நடவடிக்கை எடுத்துள்ளனா். சிவகாசியில் பசுமை மன்றம் சாா்ப... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். ராஜபாளையம், திருவனந்தபுரம் தெரு பகுதியில... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா். மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் ரோந்துப் ... மேலும் பார்க்க

சாலையோர இறைச்சிக் கடைக்குள் லாரி புகுந்ததில் இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர இறைச்சிக் கடைக்குள் லாரி புகுந்ததில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் காமராஜா்நகா் அங்காளஈஸ்வரி கோவில் தெ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் தோமா தேவாலயத்தில் மூத்த குடிமக்கள் ஞாயிறு ஆராதனை

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் மூத்த குடிமக்கள் சிறப்பு ஞாயிறு ஆராதனை குருசேகர தலைவரும், சபை குருவுமான பால் தினகரன் தலைமையில் திருவிருந்து ஆராதனையாக நடைபெற்றது. இதில் செல்வி, இமானு... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே லாரி மோதி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே சேத்தூரில் லாரி மோதி உயிரிழந்த சுந்தரராஜபுரம் ... மேலும் பார்க்க