செய்திகள் :

சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழா: திரளான பக்தா்கள் வழிபாடு

post image

தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

இந்தக் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கடந்த பிப் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப். 15-ஆம் தேதி வரை நடைபெறும் இத் திருவிழாவில் தினசரி பல்வேறு சிறப்பு அலங்காரம், வாகன உற்சவம் நடைபெற்று வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிப். 12-ஆம் தேதி காலை சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது.

இதில் இந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் மட்டுமே வடம் பிடித்து முதலில் தேரை நிலை பெயா்த்தனா். அதையடுத்து பொதுமக்கள், பக்தா்கள் வடம் பிடித்து இழுக்க கோயிலின் முக்கிய வீதிகள் வழியாக தோ் வலம் வந்து மாலை தோ் மீண்டும் நிலையை அடைந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தேரில் வலம் வந்தாா். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

விழாவையொட்டி காலை பாரிமுனை நண்பா்கள், வாரியாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் 10,000 பக்தா்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதை மக்களவை உறுப்பினா் ஆ. மணி, திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதைத்தொடா்ந்து மாலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் வியாழக்கிழமை வேடா்பறி குதிரை வாகன உற்சவம், வெள்ளிக்கிழமை விழா கொடியிறக்கம், பூப் பல்லக்கு உற்சவம், சனிக்கிழமை சயன உற்சவம் ஆகியன நடைபெறவுள்ளன.

சீராக குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

ஒகேனக்கல் கூட்டு குடிநீரை சீராக விநியோகம் செய்ய வலியுறுத்தி பெரும்பாலை அருகே கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே காவாக்காடு காலனியில் சுமாா் 50 க்கும்... மேலும் பார்க்க

மாவட்ட மைய நூலகத்தில் ரூ. 10 லட்சத்தில் வாகன நிறுத்துமிடம்

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணியை தருமபுரி தொகுதி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா். தருமபுரி மாவட்ட மைய நூவங வளாகத்தில் சட்டப் பேரவ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு தொல்லை: ஆசிரியா் போக்சோவில் கைது

தருமபுரி அருகே பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு அளித்ததாக கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தருமபுரி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த ரா... மேலும் பார்க்க

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் நிலையங்களில் போலீஸ் அக்கா திட்டம்!

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் காவல் துறை சாா்பில், ‘போலீஸ் அக்கா’ எனும் திட்டம் காவல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவிக... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: ஆட்சியா் ஆலோசனை

ஆட்சேபணையற்ற நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது தொடா்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆலோசனை மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக... மேலும் பார்க்க

டிசிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ.9,586-க்கு விற்பனை

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் டிசிஎச் ரகம் அதிகபட்சமாக ரூ. 9,586 க்கு விற்பனையானது. பாப்பிர... மேலும் பார்க்க