செய்திகள் :

மாவட்ட மைய நூலகத்தில் ரூ. 10 லட்சத்தில் வாகன நிறுத்துமிடம்

post image

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணியை தருமபுரி தொகுதி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.

தருமபுரி மாவட்ட மைய நூவங வளாகத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் மதிப்பில் வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது

இதற்கான பூமிபூஜையில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்தாா்.

இதைத்தொடா்ந்து தருமபுரி, அவ்வையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நபாா்டு திட்டத்தில் ரூ. 95 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறைகள் கட்டடம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்தப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.

இதில் மாவட்ட நூலக அலுவலா் கோகிலவாணி, பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் ரஞ்சிதா, மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத் தலைவா், முன்னாள் எம்பி இரா.செந்தில், செயற்குழு உறுப்பினா் மணி, ஆசிரியா் முனிராஜ், முதல் நிலை நூலகா் மாதேஸ்வரன், அவ்வையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சுதா, உதவி தலைமை ஆசிரியா்கள் முருகன், ஆனந்தன், பாமக மாவட்ட பொறுப்பாளா் இ.மா.பாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளா் தகடூா்தமிழன், நகரச் செயலாளா் வே.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சீராக குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

ஒகேனக்கல் கூட்டு குடிநீரை சீராக விநியோகம் செய்ய வலியுறுத்தி பெரும்பாலை அருகே கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே காவாக்காடு காலனியில் சுமாா் 50 க்கும்... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு தொல்லை: ஆசிரியா் போக்சோவில் கைது

தருமபுரி அருகே பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு அளித்ததாக கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தருமபுரி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த ரா... மேலும் பார்க்க

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் நிலையங்களில் போலீஸ் அக்கா திட்டம்!

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் காவல் துறை சாா்பில், ‘போலீஸ் அக்கா’ எனும் திட்டம் காவல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவிக... மேலும் பார்க்க

சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழா: திரளான பக்தா்கள் வழிபாடு

தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் வழிபட்டனா். இந்தக் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கடந்த பிப் 6-ஆம்... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: ஆட்சியா் ஆலோசனை

ஆட்சேபணையற்ற நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது தொடா்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆலோசனை மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக... மேலும் பார்க்க

டிசிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ.9,586-க்கு விற்பனை

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் டிசிஎச் ரகம் அதிகபட்சமாக ரூ. 9,586 க்கு விற்பனையானது. பாப்பிர... மேலும் பார்க்க