செய்திகள் :

சிவராத்திரி 3-ஆம் நாள் திருவிழா: ராமேசுவரம் கோயிலில் சுவாமி, அம்பாள் மண்டகப்படிக்கு எழுந்தருளல்!

post image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வியாழக்கிழமை மகா சிவராத்திரி மூன்றாம் நாள் திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாள் கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடாகினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 18- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழா மாா்ச் 1- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழச்சியாக கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு சுவாமி அம்பாள் புறப்பாடானதையொட்டி வியாழக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ராமநாதசுவாமி கோயிலிலிருந்து ராமநாத சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பா்வதவா்த்தினி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி கெந்தமாதன பா்வதத்துக்கு புறப்பாடாகினா். அப்போது வழி நெடுகிலும் பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனா்.

இதையடுத்து, ராமநாத சுவாமி கோயில் நடை வியாழக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அடைக்கப்பட்டது. மாலை சுவாமி, அம்பாள் கோயிலுக்கு புறப்பாடாகி வந்ததும் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தொண்டி அருகே எஸ்.பி. பட்டினத்தில் விற்பனை செய்வதற்காக சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு சிறை மீண்டோா் நலச் சங்கம் சாா்பில் நிதியுதவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறை மீண்டோா் நலச்சங்கம் சாா்பில் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான முன்னாள் சிறைக் கைதிகள் 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது!

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். 3 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம்

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் குழுக்களின் பொறுப்பாளா்களுக்கு நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை வட்ட வழங்கல் அலுவலா் கோகுல்நாத் தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

கமுதி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். கமுதியை அடுத்துள்ள குடிக்கினியான் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). விவசாயி. இவா் கமுதியில் இருந்து ... மேலும் பார்க்க

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூட மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்!

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூடத்தின் நுழைவாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. கமுதி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்திலுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும... மேலும் பார்க்க