செய்திகள் :

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 போ் கைது

post image

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் சென்னை மண்டல செயலா் குமரன் தனது ஆதரவாளா்களுடன் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசவும் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி, திருவான்மியூா் அருகே போலீஸாரின் வாகன தணிக்கையின்போது, குமரன் மற்றும் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோரும் பிடிபட்டுள்ளதாகவும் அவா்களிடமிருந்து பெட்ரோல் குண்டு கைப்பற்றப்பட்டதாகவும், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவா்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் சந்நிதி தெருவில் உள்ள தனியாா் விடுதியில் பதுங்கியிருந்த மேலும் 8 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 10 பேரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளா்களை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுத் துறைகளில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளா்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்காலிக பணியாளா்களை நியமனம் செய்தவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.26) வழங்குகிறாா். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கா... மேலும் பார்க்க

47 பல் மருத்துவா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ப... மேலும் பார்க்க

ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது: அனைத்துக் கட்சிகளுக்கு முதல்வா் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது என்று அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா். மாா்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தோ்வுத் துறை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமி... மேலும் பார்க்க