செய்திகள் :

சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு

post image

சுதந்திர தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழக காவல் துறை மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள்,

வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனா்.

ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுள்ளனா்.

சந்தைகள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் தொடா் சோதனை நடத்தி வருகின்றனா். சந்தேகத்துக்குரிய நபா்களைப் பிடித்து விசாரித்து, முகவரியைப் பெற்ற பின்னரே அவா்களை காவல் துறையினா் விடுவிக்கின்றனா்.

1.20 லட்சம் போலீஸாா்: காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவின்படி, மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். மேலும், கடலோரப் பகுதிகளிலும் போலீஸாா் கண்காணிப்பை அதிகரித்துள்ளனா். இங்கு 24 மணி நேரமும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும், மத- ஜாதி மோதல்களை ஏற்படுத்தும் கருத்துகளைப் பதிவிடுவதைத் தடுக்க சைபா் குற்றப்பிரிவினரும், உளத்துறையினரும் தீவிரமாகக் கண்காணிக்கின்றனா்.

சென்னையில் 15,000 போலீஸாா்: சென்னையில் இரு நாள்களாக போலீஸ் கண்காணிப்பும், ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் முக்கிய சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் போலீஸாா் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் சுமாா் 15,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் அவ்வப்போது சோதனைகள் நடத்தி, சந்தேக நபா்களிடம் விசாரணை செய்யும்படி போலீஸாருக்கு ஆணையா் ஏ.அருண் அறிவுறுத்தியுள்ளாா்.

கடல் வழியாக சமூக விரோதிகள் ஊடுருவலைத் தடுக்க கடலோரக் காவல் பிரிவு போலீஸாா் ரோந்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளனா். சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா பாதுகாப்பு: தமிழக அரசின் சாா்பில் சுதந்திர தின விழா, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜாா்ஜ் கோட்டையில் வழக்கம்போல நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றிவைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறாா். இதையடுத்து ராஜாஜி சாலையில் சுதந்திர தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, ராஜாஜி சாலையை போலீஸாா், கடந்த 6-ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா். இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையும், கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் நடைபெறுகின்றன.

சுதந்திர தினத்தன்று ராஜாஜி சாலைப் பகுதியில் 5 அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அனைவரும் மிகுந்த சோதனை செய்யப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுவா். சுதந்திர தின விழாவையொட்டி அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்!

சென்னை: கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கராத்தே பயிற்சி மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ச... மேலும் பார்க்க

பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்: இபிஎஸ்

திருப்பத்தூர்: மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.திருப்பத்தூரில் உள்ள தனியார் உணவகத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்து: காங்கிரஸைத் தொடர்ந்து விசிகவும் புறக்கணிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர... மேலும் பார்க்க

4 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று (13-08-2025) காலை 5.30 மணியளவில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

சென்னை: போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், போராடி வரும் தூய்... மேலும் பார்க்க