செய்திகள் :

ஐசிஎம்ஆர்-இல் வேலை வேண்டுமா..? பட்டப்படிப்பு, தட்டச்சு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

post image

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்)கீழ் இயங்கும் தேசிய பாக்டீரியா தொற்று ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாகப் பணியின் கீழ் பல்வேறு பதவிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

அறிவிப்பு எண். ICMR-NIRBI/Admn/03/Rect/2024-25

பணி: Assistant

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Upper Division Clerk

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Lower Division Clerk

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27 -க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கணினித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள் ரூ.1,600. இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.2000. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.icmr.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.8.2025

ஆசிரியா் தகுதித் தோ்வு: நவ. 1, 2-இல் நடைபெறும்: ஆசிரியா் தோ்வு வாரியம்

Ministry of Health & Family Welfare, Government of India invites online applications from eligible Indian Citizens for various posts under administrative cadre.

ஊராட்சி அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணி!

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகாவுக்கு உள்பட்ட கிராம அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்த விபரம் வருமாறு:பணி: கிராம உதவ... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீதிமன்ற அலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணி

சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களிலுள்ள அரசு வழக்குகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வ... மேலும் பார்க்க

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாடு முழுவதும் உள்ள ராணுவ பள்ளிகளில் (Army Public Schools) முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந... மேலும் பார்க்க

சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் மிஷன் சக்... மேலும் பார்க்க

ஆசிரியா் தகுதித் தோ்வு: நவ. 1, 2-இல் நடைபெறும்: ஆசிரியா் தோ்வு வாரியம்

தமிழகத்தில் நிகழாண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) நவ. 1, 2 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில்... மேலும் பார்க்க

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 212 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப... மேலும் பார்க்க