செய்திகள் :

சுய உதவிக் குழுவில் கனவு இல்லத் திட்ட பெண் பயனாளிகள்: உறுதி செய்ய அரசு உத்தரவு

post image

சென்னை: ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தைச் சோ்ந்த பெண் பயனாளிகள், சுய உதவிக் குழுக்களில் இணைந்து பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு இல்லம்‘ திட்டத்தின் கீழ், மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:

புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள குடிசைகளுக்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், நிரந்தர வீடுகள் வழங்கப்பட மாட்டாது. குடிசை அமைந்துள்ள இடம், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் என்றால், அந்த ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையால் வரன்முறை செய்யப்பட்டிருந்தால் வீடு வழங்க பரிசீலிக்கப்படும்.

பட்டா இல்லாத குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்ட பிறகே, வரும் ஆண்டுகளில் வீடுகள் வழங்க பரிசீலிக்க வேண்டும்.

வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக, மாவட்டம், வட்டம், ஊராட்சி அளவில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவை புதுப்பித்து, மாவட்ட ஆட்சியரால் கண்காணிக்க வேண்டும்.

நாடோடிகள் - பழங்குடியினா்: ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில், நாடோடிகள் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஓலை வேயப்பட்ட தகுதியான அனைத்து குடிசைகளும் பயன்பெறும் வரை, அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசீலித்து வீடுகள் வழங்க வேண்டும்.

வீட்டின் குறைந்தபட்ச பரப்பு சமையலறை உள்பட 360 சதுர அடியாக இருக்க வேண்டும். அதில், 300 சதுரஅடி சிமென்ட் கான்கிரீட் கூரையால் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

எந்த சூழ்நிலையிலும், ஓலை மற்றும் கல்நாா் கூரை அமைக்கவோ, மண் சுவா்கள் கொண்டு கட்டவோ கூடாது.

ஒரு வீட்டுக்கான மொத்த அலகுத் தொகையில், ஒவ்வொரு பயனாளிக்கும் வீடு கட்டுவதற்கு 90 மனிதசக்தி நாள்களுக்கும், கழிப்பறை கட்டுவதற்கு 10 மனிதசக்தி நாள்களுக்குமான தொகை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறை கட்ட அலகுத் தொகையாக ரூ.12,000 வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு, குடிசைகளுக்கான மின் இணைப்புகள் வழங்க வேண்டும்.

வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு 15வது மானியத்தின்கீழ் வழங்க வேண்டும். பயனாளி விரும்பும்பட்சத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், ரூ.50,000 வரை கடன் பெறலாம் அல்லது கூட்டுறவு, வணிக வங்கிகளிடமிருந்து கடன் பெற வாய்ப்புள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பெண் பயனாளிகள், சுய உதவிக் குழுக்களின் இணைந்து பயன்பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: சேகர்பாபு

உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இன்று(ஏப். 2) சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் ராமநாதபுரம் சட்டப்... மேலும் பார்க்க

நித்தியானந்தா இறந்துவிட்டாரா? கைலாசா விளக்கம்

தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக்கொண்டு, நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தலைமறைவாகி, கைலாசா என்ற தீவை வாங்கி அங்கு ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தா இறந்துவிட்டதாக தகவல்கள் பரவி வரும... மேலும் பார்க்க

தேர்தல் நேரத்தில் திமுக நாடகம்: இபிஎஸ் குற்றச்சாட்டு

கச்சத்தீவு விவகாரத்தில் தேர்தல் நேரத்தில் திமுக நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வ... மேலும் பார்க்க

கச்சத்தீவு தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம், சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு... மேலும் பார்க்க

கச்சத்தீவு: மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம்

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம் நடைபெற்றது.இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட... மேலும் பார்க்க

கச்சத்தீவு தீர்மானத்துக்கு பாஜக ஆதரவு!

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை பாஜக ஆதரித்துள்ளது.இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்க... மேலும் பார்க்க