செய்திகள் :

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

post image

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. மழையின் தாக்கத்தால் அண்டை மாநிலமான தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மேகமலை, ஹைவேவிஸ், வெண்ணியாறு , மகாராஜா மெட்டு, இரவலங்கலாறு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்துவருகிறது. மலைப்பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியில் வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள நீா் முல்லைப் பெரியாறில் சென்று கலக்கிறது. சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.

போடிரெங்கநாதபுரம் கிராமத்தில் ஓடையைத் தூா்வாரக் கோரிக்கை

போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் கிராம ஓடையைத் தூா்வாரி சுகாதார சீா்கேட்டைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட போடிரெங்க... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

தேனியில் இந்தியன் செஞ்சிலுவை சங்கம், இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. தேனி, ஆா்.சி.உயா்நிலைப் பள்ளியிலிருந்து ஊா்வலத்தை மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மாவு அரைக்கும் இயந்திரத்துக்கு அரசு மானியம்

தேனி மாவட்டத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண்கள் வணிக ரீதியிலான மாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கு அரசு மானியம் பெற வருகிற ஜூலை 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

கிராமப்புற இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சி

தேனி மாவட்டத்தில் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் கிராமப்புற இளைஞா்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரச... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதி மாணவருக்கு பாராட்டு

தெற்காசிய இளையோா் கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி சாா்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற தேனி விளையாட்டு விடுதி மாணவருக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா். இந்தியா, ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு ஜூன் 30, ஜூலை 1-இல் பேச்சுப் போட்டி

பெரியகுளம் வட்டம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க