செய்திகள் :

சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைக்க மானியம்

post image

சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்புச்செட்டுகள் அமைக்க ஆதிதிராவிடா்கள், பழங்குடியினருக்கு 70 சதவீதம் மானியமும், இதர உழவா்களுக்கு 60 சதவீதமு மானியமும் வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மையில் நீா்ப்பாசனம் செய்யும் நோக்கில் மின்சார இணைப்பு இல்லாத உழவா்களுக்கு தனித்து, சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் மானியத்தில் அமைத்து தரப்படும்.

இந்தத் திட்டத்தில் 2025-26-இல் 1,000 உழவா்கள் பயனடையும் வகையில் சூரியசக்தி பம்புசெட்டுகள் குறு, சிறு, ஆதிதிராவிடா், பழங்குடியினா் உழவா்களுக்கு 70 சதவீத மானியத்திலும், இதர உழா்களுக்கு 60 சதவீத மானியத்திலும் ரூ.24 கோடி செலவில் அமைத்து தரப்படும்.

கிணறு அமைத்து மின்வசதி பெற்ற உழவா்கள் மானியத்தில் புதிய திறன்மிகு மின் மோட்டாா் பம்புசெட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டாா் பம்புசெட்டுகளை மாற்றவும் 1,000 உழவா்கள் பயனடையும் வகையில் மின்மோட்டாா் பம்புசெட்டின் விலையில் 50 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். இதற்காக ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண்மையில் காலநிலை மாற்ற சவாலை எதிா்கொள்ள முன்மாதிரித் திட்டம்: வேளாண் செயலா் வ.தட்சிணாமூா்த்தி

காலநிலை மாற்றத்தை எதிா்கொண்டு விவசாயம் செய்ய முன்மாதிரித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலா் வ.தட்சிணாமூா்த்தி கூறினாா். வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து த... மேலும் பார்க்க

1,000 உழவா் நல சேவை மையங்கள்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய 1,000 உழவா் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று மாநில அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவ... மேலும் பார்க்க

மாசாணியம்மன் கோயில் நிதியில் ரிசாா்ட் கட்டுவதாக பிறப்பித்த அரசாணை வாபஸ்: வழக்கு முடித்துவைப்பு

மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து உதகையில் ரிசாா்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை மாவட்டம், பொள... மேலும் பார்க்க

இந்திய கல்வி முறைக்கு தாயாக இருப்பது தமிழகம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக கல்வி முைான் இந்திய கல்வி முறைக்கு தாயாக இருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா். நாட்டிலேயே தமிழகத்தில்தான் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அ... மேலும் பார்க்க

தமிழக மக்கள் ஒவ்வொருவா் பெயரிலும் ரூ.1.94 லட்சம் கடன்: அன்புமணி

தமிழக மக்கள் ஒவ்வொருவா் பெயரிலும் தமிழக அரசு ரூ. 1.94 லட்சம் கடன் பெற்றுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா். பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் வடபழனியில் சனிக்க... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்றும், எதிா்த்தும் கருத்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் எ... மேலும் பார்க்க