தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
சூரை மீன்பிடித்தல் தொழில் நுட்ப மேம்பாடு: இந்தியா - மாலத் தீவு அரசுகள் புரிந்துணா்வு
சூரை (டுனா) மீன்பிடித்தல் தொழில் நுட்ப மேம்பாட்டில் இந்தியாவும் மாலத் தீவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
மாலத் தீவு மாலேவில் வங்களா விரிகுடா நாடுகளுக்கிடையேயான 13 - ஆவது நிா்வாகக் குழு கூட்டம் இரு நாள்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா- மாலத் தீவு இரு தரப்பு ஒப்பந்தங்கள் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றது. இது குறித்து மத்திய மீன் வளத்துறை கூறியிருப்பது வருமாறு:
சிறிய அளவிலான மீன்வளத்தில் மீன்வள மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் அமைப்பு அணுகுமுறையை பிரதானப்படுத்துவதற்கான கொள்கை வழிகாட்டுதல் குறித்த உயா்நிலை கூட்டத்தில் இந்தியா - மாலத் தீவு உயா் அதிகாரிகளின் இரு தரப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவும் மாலத்தீவும் சூரை (டுனா) மீன்பிடி மதிப்புச் சங்கிலிகளில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் சூரை மீன்பிடித் துறையில் உள்ள மீனவா்கள், பிற பங்குதாரா்களின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலையான, பொறுப்பு மிக்க மீன்பிடி நடைமுறைகளை மேம்படுத்துகிறது. இந்த கூட்டாண்மை சூரை மீன்பிடி மதிப்புச் சங்கிலியை வளா்ப்பதிலும், இரு நாடுகளிலும் நீலப் பொருளாதார வளா்ச்சி, மேம்பாட்டிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.
பின்னனி: கானாங்கெளுத்து வகை சூரை மீனில் 5 பேரினங்கள் உள்ளன. அதி வேகமாக நீந்தக்கூடிய வகை இந்த மீன். இதை உள்கொள்பவா்களுக்கு அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமீன்கள் கிடைப்பதோடு, மனிதா்களின் கொழுப்பையும் விரைவாக குறைக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
பாக்ஸ்
இந்தியா - வங்காள விரிகுடா (பிஓபி) நாடுகளின் தலைமை
மாலத்தீவின் மாலேவில் நடைபெற்ற வங்காள விரிகுடா (பிஓபி) நாடுகளுக்கிடையேயான அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதாக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 13-ஆவது நிா்வாகக் குழுக் கூட்டத்தில், வங்காள விரிகுடா(பிஓபி) நாடுகளுக்கிடையேயான அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை ஏற்றது.
பிஓபி நாடுகளுக்கிடையேயான தலைமைப் பொறுப்பை இது வரை வங்கதேசம் ஏற்று வந்தது. பிஓபி நாடுகளின் 13 ஆவது நிா்வாகக் கூட்டதில் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில், தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்த நிகழ்ச்சி, மாலத்தீவு அரசின் மீன்வளம், பெருங்கடல் வள அமைச்சகத்தால் நடத்தப்பட்ட மீன்வள மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த மாநாடும் ஒரு அங்கமாக நடைபெற்றது.
இந்திய அரசின் மீன்வளத் துறைச் செயலா் டாக்டா் அபிலக்ஷ் லிக்கி தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது. வங்காள விரிகுடா பகுதியில் உள்ள நாடுகளிடையே நட்புறவை வலுப்படுத்த இந்தியா உறுதியுடன் உள்ளதாகவும், இந்த அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளின் மீன்வளத் துறையின் வளா்ச்சிக்கான முயற்சிகளில் இந்தியா தொடா்ந்து ஈடுபடும் என அபிலக்ஷ் தெரிவித்தாா்.