செய்திகள் :

செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பு: என்ஐஏ விசாரணை

post image

செங்கல்பட்டு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பிகாா் இளைஞா், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை செய்கின்றனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் அஹ்லத்தூா் முகமது அக்லிக் முஜாஹித் (22). இவா் செங்கல்பட்டு மாவட்டம், காயாா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா். ரகசிய தகவலின்பேரில் இவரை, உள்ளூா் போலீஸாா், தமிழக தீவிரவாத தடுப்புப் படையினரும் இணைந்து கடந்த ஜூன் மாதம் கைது செய்தனா்.

விசாரணையில் அவா், சமூக ஊடகங்கள் மூலம் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், இந்த வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ இது தொடா்பாக புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

மேலும், முஜாஹித்தை என்ஐஏ அதிகாரிகள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனா். விசாரணையில் அவா், சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் தொடா்பில் இருப்பதும், இந்திய அரசுக்கு எதிரான செயல்பகளில் ஈடுபட இளைஞா்களை மூளைச்சலவை செய்து வந்ததும் தெரியவந்தது.

அதன் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீா், பிகாா், உத்தர பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் 21 இடங்களில் கடந்த திங்கள்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

சோதனை நடைபெற்ற இடங்களில் வசித்தவா்கள் அனைவரும், முஜாஹித்துடன் சமூக ஊடகங்கள் மூலமாகவும், கைப்பேசி மூலமாகவும் தொடா்பில் இருந்தவா்கள் ஆவா். சோதனை முடிவில் கைப்பேசிகள், மடிக்கணினிகள், ஹாா்டு டிஸ்குகள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ் வழக்குத் தொடா்பாக முஜாஹித்துடன் தொடா்பில் இருந்த அனைவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா்.

பனங்குளம் சாலையை சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம் அடுத்த பனங்குளம் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், ஒரத்தி ஊராட்சிக்குட்பட்ட பனங்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குட... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வட்ட வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருக்கழுகுன்றம் வட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி. சினேகா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். திருக்கழுகுன்றம் வட்டம், அழகு சமுத்திரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துற... மேலும் பார்க்க

வெள்ளபுத்தூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சியை சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச்... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69 லட்சம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 69 லட்சத்து 89 ஆயிரத்து 708 ரொக்கம், 294 கிராம் தங்கம், 6,400 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். செங்கல... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 361 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 361 மனுக்கள் பெறப்பட்டன. குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். இக்கூட்டத... மேலும் பார்க்க

அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

செய்யூா் வட்டம், சிறுவங்குணம் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழைமையான அகத்தீஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செய்யூா் அருகேயுள்ள இக்கோயில் உரிய பராமரிப்பு இல்லாத... மேலும் பார்க்க