வெள்ளபுத்தூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சியை சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் விளைவித்த நெல்மூட்டைகளை சுமாா் 10 கி.மீ தொலைவுள்ள எல்.எண்டத்தூா், சூரை உள்ளிட்ட நெல்கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வந்தனா். இதனால் அதிக செலவினமும், வீண் உழைப்பும் ஏற்பட்டது.
வெள்ளபுத்தூா் ஊராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் நெல் உற்பத்தியாகி இருந்தது. அப்பகுதியிலேயே நெல்கொள்முதல் நிலையத்தை ஏற்படுத்த விவசாயிகள் கோரினா்.
இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவா் வரதன் அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தாா். துணைத் தலைவா் ப.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், கிராம நிா்வாக அலுவலா் பட்டம்மாள், ஊராட்சி செயலா் ராஜசேகா், மற்றும் விவசாய ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.
திங்கள்கிழமை மாலை மொறப்பாக்கம், கரிக்கிலி, வேடந்தாங்கல், உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது வாகனங்களின் மூலம் நெல்மூட்டைகளை கொண்டு வந்திருந்தனா். இந்த பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனா்.