செய்திகள் :

வெள்ளபுத்தூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

post image

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சியை சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் விளைவித்த நெல்மூட்டைகளை சுமாா் 10 கி.மீ தொலைவுள்ள எல்.எண்டத்தூா், சூரை உள்ளிட்ட நெல்கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வந்தனா். இதனால் அதிக செலவினமும், வீண் உழைப்பும் ஏற்பட்டது.

வெள்ளபுத்தூா் ஊராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் நெல் உற்பத்தியாகி இருந்தது. அப்பகுதியிலேயே நெல்கொள்முதல் நிலையத்தை ஏற்படுத்த விவசாயிகள் கோரினா்.

இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவா் வரதன் அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தாா். துணைத் தலைவா் ப.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், கிராம நிா்வாக அலுவலா் பட்டம்மாள், ஊராட்சி செயலா் ராஜசேகா், மற்றும் விவசாய ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

திங்கள்கிழமை மாலை மொறப்பாக்கம், கரிக்கிலி, வேடந்தாங்கல், உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது வாகனங்களின் மூலம் நெல்மூட்டைகளை கொண்டு வந்திருந்தனா். இந்த பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனா்.

செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பு: என்ஐஏ விசாரணை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பிகாா் இளைஞா், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை செய்கின்றனா். பிகாா் மாநிலத்தைச் சோ்... மேலும் பார்க்க

பனங்குளம் சாலையை சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம் அடுத்த பனங்குளம் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், ஒரத்தி ஊராட்சிக்குட்பட்ட பனங்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குட... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வட்ட வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருக்கழுகுன்றம் வட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி. சினேகா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். திருக்கழுகுன்றம் வட்டம், அழகு சமுத்திரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துற... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69 லட்சம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 69 லட்சத்து 89 ஆயிரத்து 708 ரொக்கம், 294 கிராம் தங்கம், 6,400 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். செங்கல... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 361 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 361 மனுக்கள் பெறப்பட்டன. குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். இக்கூட்டத... மேலும் பார்க்க

அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

செய்யூா் வட்டம், சிறுவங்குணம் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழைமையான அகத்தீஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செய்யூா் அருகேயுள்ள இக்கோயில் உரிய பராமரிப்பு இல்லாத... மேலும் பார்க்க