செய்திகள் :

செஞ்சி: `காசிருந்தா கழிவறையைப் பயன்படுத்துங்க..' - பொது கழிவறையில் கட்டண `அடாவடி!'

post image

செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என செஞ்சி பேருந்து நிலையத்துக்கு வரும் பெரும்பாலானோர் கட்டண கழிவறையையே பயன்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.

செஞ்சியில் மிகப் பிரபலமான சுற்றுலா தளமான செஞ்சி கோட்டை அமைந்துள்ளது .செஞ்சி கோட்டையைப் பார்வையிடுவதற்கு இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து  ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் செஞ்சி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பேருந்து நிலையம் என்பதால் பொதுமக்கள் பெருமளவில் கூடுவதோடு, அவர்கள் மற்ற ஊர்களுக்கோ அல்லது வேறு இடத்திற்கோ செல்வதற்கு இங்கு சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது.

இவ்வாறு காத்திருக்கும் பொதுமக்கள் தங்களின் அவசர நேரத்தில்  பொது கழிவறை இல்லாததால், கட்டண கழிவறையைப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அன்றாட பேருந்து வசதிக்கு மட்டுமே பணம் எடுத்து வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதனால் மிகவும் அவதிப்படுகிறார்கள் எனவும் பொதுமக்கள் கூறுகிறார்கள். மேலும் செஞ்சி பேருந்து நிலையத்திற்கு வரும் சிலர் கட்டண கழிவறைக்குப் பணம் இல்லாமல் அப்பகுதிக்கு அருகில் இருக்கும் மறைவான இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டுச் சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசி காணப்படுகிறது. கூடுதலாக விசாரித்த பிறகே தெரிந்தது, தற்போது கட்டண கழிப்பறை எனப் பலகை வைத்து பணம் வசூலிப்பது பொது கழிப்பறை என. மேலும் கடந்த சில மாதங்களாகவே இவ்வாறு தான் கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்தது.

இது குறித்து விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் கேட்டபோது, "நான் பணியில் வந்து சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகிறது. நான் என்ன குற்றச்சாட்டு என விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்கிறேன்" எனக் கூறினார். 

மாவட்ட ஆட்சியர் பேசி முடித்த ஐந்து நிமிடங்களிலேயே, செஞ்சி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து நம்மைத் தொடர்புகொண்டு பேசிய அலுவலர் ஒருவர், "செஞ்சி பேருந்து நிலையத்தில் இரண்டு கழிவறைகள் உள்ளது. ஒன்றில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பூட்டி இருக்கிறது. மற்றொன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்டண கழிவறையில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அங்குள்ள பொருள்களும், கட்டண கழிவறை என்ற பலகையும் பொது கழிவறையில் இருக்கும் இடத்தில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் அதனைக் கட்டண கழிவறை எனத் தவறாக எண்ணுகிறார்கள். ஆனால் அது பொதுக் கழிப்பிடமே. அங்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை. அவ்வாறு கட்டணம் வசூலித்தாலும் அது தவறு. கட்டண கழிப்பறையில் கட்டுமான பணி முடிந்த பிறகு பொருள்கள் அனைத்தும் மாற்றி வைக்கப்படும்" எனக் கூறினார். 

இவர் பேசிய அன்றே மீண்டும் செஞ்சி பேருந்து நிலையத்திற்குச் சென்றோம். கட்டண கழிவறை என்ற பலகை வைத்து வெளியே மேசை போட்டு, கட்டணம் தற்போது வரை வசூலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவற்றைப் பார்த்தால் குறுகிய காலத்தில் கட்டுமான பணிக்காகப் பொருள்களை மாற்றி வைத்ததாகத் தெரியவில்லை. வெகு நாள்களாகவே கட்டண கழிப்பறை என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பதாகத் தெரிகிறது. மேலும் பொதுமக்கள் இவற்றைப் பற்றி பணம் வசூலிப்பவரிடம் கேட்டபோது, "கான்ட்ராக்ட்டில் இந்த கழிவறையினை நடத்துகிறோம். எனவே பணம் வசூலிக்கத்தான் செய்வோம். வேண்டுமென்றால் கழிவறையை உபயோகப்படுத்துங்கள். இல்லையெனில் சென்றுவிடுங்கள்" என அலட்சியமாகப் பதில் கூறுகிறார். 

எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தானின் வீடு செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளித்தான் உள்ளது. ஆனாலும் இந்த அவல நிலை, அஞ்சுகம் அம்மாள் நினைவு பேருந்து நிலையத்திற்கு ஏற்பட்டுள்ளது.  

விருதுநகர்: அரசுப் பள்ளி சத்துணவு மையத்தில் திடீர் ஆய்வு; சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்..!

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவுடையாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மற்றும... மேலும் பார்க்க

Kumbh Mela: ``அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்பனை ஏன்?" -ரயில்வேக்கு நீதிமன்றம் கேள்வி!

டெல்லி ரயில்வே நிலையத்தில் கும்பமேளாவுக்காக கூடிய கூட்டத்தால் 18 பேர் மரணித்ததை அடுத்து தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில், அதிக முன்பதிவில்லாத டிக்கெட் விற்பனை செய்யப்படுவது, ஒரே பெட்டியில் அதிக நபர்கள் ஏ... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமைகள்; இனியாவது ஸ்டாலின்...' - இபிஎஸ் காட்டம்!

கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.இது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் 'தி.மு.க' தலைமையிலான தமிழ்நாடு அரசைக் ... மேலும் பார்க்க

NTK: "தமிழ்த்தேசியத்திற்கு எதிரான பாஜகவிடம் எங்களை விற்றுவிடுவீர்கள்" - சீமான் மீது தமிழரசன் காட்டம்

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாகத் தமிழரசன் வெளியிட்டுள்ள கடிதத்தில், "32 ஆண்டு காலமாகத் தமிழ்த் தேசிய அரசியலுக்கான ப... மேலும் பார்க்க

Stalin: `வடசென்னையை வளர்ந்த சென்னையாக்குவோம்; 90% வாக்குறுதிகள்..!“ - முதல்வர் மு.க.ஸ்டாலின்

இன்று (பிப்19) சென்னை புளியந்தோப்பில் 712 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அந்நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், வட சென்னையின் வளர்... மேலும் பார்க்க

Vijay: ``விஜய் தனியாக `CBSE' பள்ளி நடத்துகிறார், அதில் இந்தி...'' -பாஜக அண்ணாமலை கேள்வி

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்திய... மேலும் பார்க்க