செஞ்சி பேருந்து நிலையத்தில் அணிவகுத்து நிற்கும் காா்களால் அவதிப்படும் பொதுமக்கள்!பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் காா்கள், தள்ளு வண்டிகளால் விபத்துகள் ஏற்படுவதால் வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செஞ்சி சிறந்த சுற்றுலா தலமாகும். புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகிறது. தொடக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்த பேருந்து நிலையம், தற்போது காா்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது.
தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் தற்போது காா்கள் வரிசைக்கட்டி இடையூறாக நிற்கின்றன. காா்கள் அதிவேகமாக செல்வதால் பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துக்குள்ளாகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை பேருந்து நிலையத்துக்குச் சென்ற பள்ளி மாணவா் ஒருவா் மீது காா் மோதியதில் அவரது கை எலும்பு முறிவு ஏற்பட்டதாம்.
12 பேருந்துகள் மட்டுமே நிற்கக்கூடிய சிறிய பேருந்து நிலையத்தில் காா்களும் வரிசைக்கட்டி நிற்பதால் விபத்துகள் ஏற்படுவதாக பயணிகள் கூறுகின்றனா். போதாக்குறைக்கு தள்ளு வண்டிகளும் ஆக்கிரமித்துள்ளன.
பேருந்து நிலையத்தில் காா்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகம் எச்சரித்தும் காா்களை நிறுத்திச் செல்கின்றனா்.
பேருந்து நிலையத்தின் எதிரே உணவு விடுதிகள் மற்றும் கடை வீதிகள் உள்ளதால் உணவு அருந்த செல்வோரும், பஜாருக்கு பொருள்கள் வாங்கச் செல்வோரும் வாகனங்களை இங்கு நிறுத்திச் செல்கின்றனா். இதனால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.
எனவே, செஞ்சி பேரூராட்சி நிா்வாகம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேருந்து நிலையம் திறக்கப்பட்டபோது சுத்திகரிக்கப்பட்ட இரண்டு குடி நீா் தொட்டிகள் அமைக்கப்பட்டன. தற்போது அவை பழுதடைந்து விட்டதால், குடிநீருக்கு பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது. அடுத்து வருவது கோடைக் காலம் என்பதால் குடிநீா் பிரச்னையை தீா்க்க, பேரூராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் பழுதான குடி நீா் தொட்டிகளை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாகும்.