செய்திகள் :

சென்னை தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆழியாறு அணையில் மூழ்கி பலி

post image

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆழியாறு அணையில் மூழ்கி பலி

கோவை: சென்னையில் இருந்து சுற்றுலா வந்த தனியார் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் ஆழியாறு அணையின் நீரில் மூழ்கி பலியாகினர்.

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த தனியார் பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோடை விடுமுறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இன்று காலை கல்லூரி மாணவர்கள் ஆழியாறு அணையின் வாய்க்கால் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

பலியான மாணவர்கள்

அப்போது, ஆழமான சேற்றுப் பகுதிக்கு சென்ற தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப், ஆகிய மூன்று மாணவர்கள் ஆழியாறு ஆற்றின் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இருந்து சுற்றுலா வந்த இடத்தில் கல்லூரி மாணவர்களில் மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்ததை பார்த்து மற்ற மாணவர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு: இருவரைக் காவலில் வைக்க உத்தவு

செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் உத்தரவாதம் செலுத்தாத இருவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் முன்பு இன்... மேலும் பார்க்க

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் மாற்றம்!

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராக இருந்த டாக்டர் கே சாந்தாராம், சென்னை மருத்துவக் ... மேலும் பார்க்க

சொந்த மாநில அரசு மீதே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆளுநர் கூறலாமா? வழக்குரைஞர் வில்சன்

தமிழக ஆளுநர், சொந்த மாநில அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு முன்வைக்க முடியும்? என்று தமிழக அரசு வழக்குரைஞர் வில்சன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையி... மேலும் பார்க்க

ஆளுநர்களை வைத்து அரசியல்! அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு

ஆளுநர்களை வைத்து மத்திய அரசு அரசியல் செய்கிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது ... மேலும் பார்க்க

அவசர காலத்தை நினைவுபடுத்துகிறது: ஆளுநர் ரவி

மாநாட்டில் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "முதல்வர் ஸ்டாலி... மேலும் பார்க்க

ரூ.200-க்கு வீடுகளுக்கு நேரடி டேட்டா சேவை?

தமிழக மக்களின் வீடுகளுக்கு குறைந்த விலையில் இணைய சேவை வழங்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.சட்டப்பேரவையில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற... மேலும் பார்க்க