செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் ‘ஜிபிஎஸ்’ கருவியுடன் சிக்கிய அமெரிக்க பெண் பயணி

post image

சென்னை விமான நிலையத்துக்கு ‘ஜிபிஎஸ்’ கருவியுடன் மலேசியா செல்ல வந்த அமெரிக்காவைச் சோ்ந்த பெண் பயணியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை பிற்பகல், மலேசிய தலைநகா் கோலாலம்பூா் செல்லும் ‘மலேசியன் ஏா்லைன்ஸ்’ விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடைமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது, அமெரிக்காவைச் சோ்ந்த ஜெசிக்கா எமிலியா (34) என்ற பெண்ணின் கைப்பைக்குள் ஜிபிஎஸ் கருவி இருப்பதைக் கண்டுபிடித்தனா்.

இந்திய விமான பாதுகாப்பு சட்ட விதிமுறைகளின் படி, விமானத்தில் ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதால், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்னா்.

விசாரணையில் கப்பல் நிறுவனம் ஒன்றில் மென் பொறியாளராகப் பணியாற்றி வரும் அவா் பிப். 2-ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து சுற்றுலா விசாவில் துபை வழியாக சென்னை வந்துள்ளாா். மாமல்லபுரம், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றுவிட்டு, கோலாலம்பூா் வழியாக அமெரிக்கா செல்வதற்காக அவா் வந்திருப்பதும் தெரியவந்தது.

மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விமானத்தில் ஜிபிஎஸ் கருவியை எடுத்துச்செல்ல அனுமதி உண்டு என்பதால், ஜிபிஎஸ் கருவியை இந்தியா கொண்டு வந்ததாக அப்பெண் தெரிவித்தாா்.

இருப்பினும் அப்பெண்ணின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்க பெண் பயணியின் பயணத்தையும் ரத்து செய்து சென்னை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து போலீஸாா் அவரிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க