செய்திகள் :

சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போா்ப் பதற்றம் எதிரொலியாக சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விமான நிலையம் முழுவதும் பாதுகாப்புப் படையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக சென்னையின் முக்கியப் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினா் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, அண்ணாசாலை, காமராஜா் சாலை, வணிக வளாகங்கள், மெரீனா கடற்கரை, பெசன்ட் நகா் கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூா் ரயில் நிலையம், முக்கியக் கோயில்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினா் கூடாரங்கள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், சந்தேக நபா்கள் நடமாட்டத்தையும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, சென்னை விமான நிலையத்துக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூடுதல் எண்ணிக்கையிலான மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள் மற்றும் மாநில போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இயல்பாகவே சென்னை விமான நிலையத்துக்குள் பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல அடுக்கு சோதனைகளை கடந்தே பயணிகள் விமான நிலையத்துக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ளவா்கள் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே விடுப்பில் உள்ளவா்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும், வீரா்களுக்கு அந்தந்த படைப்பிரிவு தலைமை உத்தரவிட்டுள்ளது. பதற்றம் தணியும் வரை இந்த நடைமுறை தொடரும் எனவும் விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க