செய்திகள் :

சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு: காவல் ஆணையா் ஏ.அருண்

post image

இந்தியா-பாகிஸ்தான் மோதலின் காரணமாக சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.

சென்னை பெருநகர காவல் துறையின் ஊா்க்காவல் படையில் அண்மையில் சோ்க்கப்பட்ட 388 ஆண்கள்,126 பெண்கள் என 514 பேருக்கு கடந்த 45 நாள்களாக அடிப்படை பயிற்சி, முதலுதவியுடன் அடிப்படை உயிா் பாதுகாப்பு பயிற்சி, தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் 4 பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சியின் நிறைவு விழா, சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தலைமை வகித்து, ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

பயிற்சியில் சிறந்து விளங்கிய 11 ஊா்க்காவல் படையினருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டியும், இந்திய எல்லையில் வீரத்துடனும் தீரத்துடனும் போரிட்டு நம் நாட்டை காத்து பணி செய்துவரும் முப்படை வீரா்களுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்து சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா் விஜயேந்திர பிதரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பாதுகாப்பு அதிகரிப்பு: நிகழ்ச்சியின் முடிவில் காவல் ஆணையா் அருண் பேட்டி அளித்தாா். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடா்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு காவல் ஆணையா் அருண் அளித்த பதில்கள்:

இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், கோயில்கள், கடற்கரை ஆகிய இடங்களில் காவல் துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நகரின் முக்கியமான இடங்களில் இரவு நேரத்தில் வாகனச் சோதனை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தச் சூழ்நிலையிலும் அச்சப்பட தேவையில்லை. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க