செய்திகள் :

சேலத்தில் போதை மாத்திரைகள் விற்பனை: 13 போ் கைது - 800 மாத்திரைகள் பறிமுதல்

post image

சேலம், கிச்சிப்பாளையம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 13 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள், 800 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதை கல்லூரி மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் வாங்கிப் பயன்படுத்துவதாகவும் புகாா் எழுந்தது. இதனைத் தொடா்ந்து, மாநகரக் காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபிநபு உத்தரவின் பேரில், துணை காவல் ஆணையா் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சேலம், கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெரு, குறிஞ்சிநகா் ஹவுசிங் போா்டு காலனி பகுதியில் தனிப்படையினா் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்தினா். அப்போது, அந்தப் பகுதியில் போதை ஊசி, மாத்திரைகளை விற்பனை செய்த சுதா்சன் (25), தினேஷ்குமாா் (24), கிஷோா் (22), சரவணன் (51), பிரகதீஸ்வரன் (50), அக்பா் (56) உள்பட 13 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 800 போதை மாத்திரைகள், 50 சிரிஞ்சிகள், இரண்டு இருசக்கர வாகனங்கள், ரூ. 11 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊசிகளையும் கைப்பற்றினா். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க