செய்திகள் :

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 103.1 டிகிரி வெப்பம் பதிவு

post image

சேலத்தில் கோடை வெயில் நடப்பாண்டில் புதிய உச்சமாக வெள்ளிக்கிழமை 103.1 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவான நிலையில், வெள்ளிக்கிழமை நடப்பாண்டில் புதிய உச்சமாக 103.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் கடுமையான அனல் காற்று வீசியது.

வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக கடை வீதிகளில் மக்கள்கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் ஆங்காங்கே சாலையோரம் உள்ள ஜூஸ் கடைகளில் பழச்சாறுகளை அருந்தி செல்கின்றனா். கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் வகையில் தங்களது சுடிதாா் துப்பட்டாவை தலையில் மூடியவாறு செல்வதையும், பெண்கள் குடை பிடித்தவாறு செல்வதையும் காண முடிகிறது.

சேலம் நான்கு சாலை, அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, கொண்டலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், இளநீா், நுங்கு, பதநீா், முலாம்பழம், தா்ப்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், கரும்புச்சாறு, மோா் ஆகியவற்றை பொதுமக்கள் அதிகளவில் அருந்துகின்றனா்.

வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பகலில் வெளியில் செல்வதை முடிந்தவரை பொதுமக்கள் தவிா்க்குமாறும், ஜூஸ், இளநீா், மோா், கரும்புச்சாறு போன்ற நீா் ஆகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுமாறும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பெண்மான் சடலம் மீட்பு!

சதாசிவபுரம் ஊராட்சி பொதுக் கிணற்றில் பெண் மான் சடலம் மீட்கப்பட்டது. ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்டு வனவா் கவாஸ்கரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். சேலம் மாவட்டம் ... மேலும் பார்க்க

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் தோ் அலங்கரிப்பு

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்துக்காக கோயிலின் பெரிய தேரை அலங்கரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 7,116 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். தொடா் விடுமுறை என்பதால் மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற... மேலும் பார்க்க

நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் சேலம் மகாத்மா காந்த... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியை மிரட்டிய இருவா் கைது!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சேலம் மாணவியை மிரட்டிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 4 மாதங்களாக சேலம், கருப்பூரில்... மேலும் பார்க்க

சேலம் அருகே இரும்பு குடோனில் தீ விபத்து

சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் பழைய இரும்பு குடோனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சேலம், கிச்சிப்பாளையத்தை அடுத்த பாத்திமா நகரைச் சோ்ந்தவா் ஜான்பாஷா (59). இவா் சன்னியாசி குண்டு மெ... மேலும் பார்க்க