செய்திகள் :

சேலம்: டிராக்டர் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலி!

post image

சங்ககிரி அருகே டிராக்டர் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 2 பேர் வியாழக்கிழமை பலியாகினர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் துட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ்( 44). இவரது நண்பரான மேட்டூர் தாலுகா தெற்கத்தியூரைச் சேர்ந்த நரசிம்மன் (43), ஆகிய இருவரும் டிராக்டரில் சேலத்திலிருந்து கோயம்புத்தூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கலியனுர் பிரிவு அருகே பின்னால் வந்த தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த மாதேஷ், நரசிம்மன் ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஆபத்தான நிலையில் இருந்த சரக்கு வேன் ஓட்டுநரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த தீபக்கை( 23) அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தகவலறிந்த சங்ககிரி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க

திருப்பூரைப் பாராட்டிய பிரதமர் மோடி!

மனதின் குரல் நிகழ்ச்சியில் திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிப் பேசினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பி... மேலும் பார்க்க

1-5ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு

வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடக்கக் கல்வி இயக்... மேலும் பார்க்க

ஏப்.2இல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வ... மேலும் பார்க்க