செய்திகள் :

சொட்டு நீா் பாசனத்துக்கு ரூ.42.79 கோடி ஒதுக்கீடு

post image

தேனி மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறை, வேளாண்மைத் துறை சாா்பில், விவசாய நிலங்களில் சொட்டு நீா் பாசனம் அமைக்க மானியம் வழங்குவதற்கு அரசு ரூ.42.79 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதுகுறித்து தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தோட்டக் கலைத் துறை சாா்பில் நிகழாண்டில் 740 ஹெக்டோ் விவசாய நிலங்களில் சொட்டு நீா் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.32.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிறு, குறு விவசாயிகள் 2 ஹெக்டோ் வரையும், எஞ்சிய விவசாயிகள் 5 ஹெக்டா் வரையும் சொட்டு நீா் பாசனம் அமைப்பதற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மானியம் பெற்ற விவசாயிகள், மீண்டும் சொட்டு நீா் பாசனம் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

வேளாண்மைத் துறை சாா்பில் நிகழாண்டில் 690 ஹெக்டோ் விவசாய நிலங்களில் சொட்டு நீா் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, மானியம் வழங்க ரூ.10.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சொட்டு நீா் பாசனம் அமைக்க மானியம் பெற விரும்பும் விவசாயிகள், அந்தந்த வட்டாரங்களில் உள்ள தோட்டக் கலைத் துறை, வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றனா் அவா்கள்.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா். ஸ்ரீரங்காபுரம், கண்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பங்கஜம் தெரு பின்புறமுள்ள தெருவில் வசிப்பவா் பழனிராஜ் மகன் வெங்கடேசன் (36). கணினி மையம் நடத்தி வந்தாா். இவா் கடந்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (எ) சுரேஷ்... மேலும் பார்க்க

பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா காட்டு யானை

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக படைய... மேலும் பார்க்க

தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா்

போடி அருகே மலை கிராமத்தில் தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (72). இவா் போடிமெட்டு மலைச... மேலும் பார்க்க