நீதிபதி வீட்டில் கணக்கில் வராத பணம் இருந்ததா? 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்க ...
சொத்து மதிப்புச் சான்றுக்காக ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய VAO - கையும் களவுமாக கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கே.அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (38). இவர் அரசுப் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் ஒப்பந்த உரிமம் புதுப்பிக்க சொத்து மதிப்புச் சான்றிதழ் கேட்டு கே.அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்தச் சான்றிதழை கையெழுத்திட்டு அடுத்த நிலை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியருக்கு அனுப்ப கிராம நிர்வாக அலுவலரான ரேவதி கதிர்வேலிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிர்வேல் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.

புகாரை அடுத்து ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கதிர்வேலிடம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, கதிர்வேல் லஞ்சப்பணத்தை ரேவதியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி ரவிகுமார், ஆய்வாளர் சசிரேகா உள்ளிட்ட போலீஸார் ரேவதியை கைது செய்தனர். மேலும் லஞ்சப்பணம் ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். சொத்து மதிப்பு சான்றிதழ் அளிக்க லஞ்சம் பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks