நீதிபதி வீட்டில் கணக்கில் வராத பணம் இருந்ததா? 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்க ...
சொந்தமாக தீவு வைத்திருக்கும் பிரபல நடிகை; யார் இந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்?
இலங்கையின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவை பாலிவுட் பிரபல நடிகை வாங்கியுள்ளார்.
நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கடந்த 2012 ஆம் ஆண்டு சுமார் 3.5 கோடிக்கு ரூபாய் மதிப்பில் வாங்கியதாக கூறப்படுகிறது.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் குமார் சங்கக்காரவின் தனியார் தீவுக்கு அருகில் இந்தத் தீவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தீவு ஆடம்பர ரியல் எஸ்டேட்டுகளுக்கான ஒரு முக்கியமான இடமாக மாறியுள்ளது.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்த தீவை வாங்கி அதில் வில்லா கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இந்த தீவை ஒரு தனியார் இல்லமாகப் பயன்படுத்துகிறாரா அல்லது வணிக நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடுகிறாரா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.
யார் இந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்?
2006 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இலங்கை பட்டத்தை வென்றவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான அலாடின் என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
பின்னர் அவர் மர்டர் 2, ஹவுஸ்ஃபுல் 2, ரேஸ் 2 மற்றும் கிக் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
CA Knowledge படி, அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.116 கோடி ($14 மில்லியன்) என கூறப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதிர் பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது ஜாக்குலின் ஹவுஸ்ஃபுல் 5 என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks