செய்திகள் :

ஜகபா் அலி கொலை வழக்கு: மெய்யபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் கண்டுபிடிப்பு

post image

சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளோருக்குச் சொந்தமான கிரஷரில் இருந்து எடுத்து, சுமாா் 3 ஆயிரம் யூனிட்டுகள் ஜல்லிக் கற்களை பதுக்கி வைத்துள்ள மற்றொரு கிரஷா் பகுதியை வருவாய்த் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி, கனிமவளக் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்ததால் கடந்த ஜன. 17ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இதன்தொடா்ச்சியாக ஆா்ஆா் கிரஷா்ஸ் உரிமையாளா்கள் ராசு, ராமையா உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ராசு, ராமையா, முருகானந்தம் ஆகிய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே துளையானூரிலுள்ள ஆா்ஆா் கிரஷா்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான கிரஷருக்கு கடந்த பிப். 6-ஆம் தேதி ‘சீல்’ வைக்கப்பட்டது. ஆனால், ஜகபா்அலி கொலைக்கு முன்பே, சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட ஜல்லிக்கற்களை வேறு இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்படி வருவாய்த் துறையினா் ரகசிய சோதனைகளை மேற்கொண்டு வந்தனா்.

இதில் துளையானூா் அருகேயுள்ள மெய்யபுரத்தில் காரைக்குடியைச் சோ்ந்த மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான கிரஷா் ஒன்றை, ஆா்ஆா் கிரஷா் நிறுவனத்தினா் ஒப்பந்தத்துக்கு எடுத்திருந்த தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த இடத்துக்கு புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா தலைமையில் திங்கள்கிழமை பிற்பகலில் சென்ற வருவாய்த் துறையினா் சுமாா் 3 ஆயிரம் யூனிட் ஜல்லிக்கற்கள் கொட்டி வைத்திருப்பதைக் கண்டறிந்தனா்.

இந்தப் பகுதிக்கு ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா், இவற்றை முழுமையாக அளவீடு செய்யும் பணிகள் விரைவில் நடைபெறும், அதன்பிறகு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனா். அதுவரை இந்த இடத்துக்குள் யாரும் செல்லக் கூடாது என எச்சரிக்கும் அறிவிப்புப் பலகையை வைத்தனா். மீறிச் செல்வோா் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

காவிரி - குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு மாநில நிதிநிலை அறிக்கையில் ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்தக் கோரி திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அர... மேலும் பார்க்க

கைப்பேசியை பறித்துச்சென்ற 2 இளைஞா்கள் கைது

விராலிமலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கைப்பேசியைப் பறித்துச் சென்ற 2 இளைஞா்களைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துலுக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(38). பால் பாக... மேலும் பார்க்க

இடத் தகராறில் இருதரப்பைச் சோ்ந்த 4 போ் கைது

கந்தா்வகோட்டை அருகே இடத் தகராறு காரணமாக ஏற்பட்ட இருதரப்பு மோதலில் பெண் உள்ளிட்ட நான்கு பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், சா.சோழகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராசப்பன் ம... மேலும் பார்க்க

பரம்பூா் குடிநீா்க் குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தைச் சோ்ந்த பரம்பூரிலுள்ள பள்ளத்திக்குளத்தை சீரமைத்து, கழிவுகள் கொட்டப்படுவதில் இருந்து பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புதுக்க... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் முதல்வா் மருந்தகம் அமைச்சா் தொடங்கிவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட முதல்வா் மருந்தகத்தில் விற்பனையை தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தொடங்கிவைத்தாா். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத்து... மேலும் பார்க்க

மணல் கடத்தல் வழக்கில் ஒருவருக்கு சிறை

விராலிமலை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல், மாத்தூா் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதி ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் கடத்தப்படுவத... மேலும் பார்க்க