செய்திகள் :

ஜன்னல் வழியாக கடைக்குள் புகுந்து திருடிய பெண்கள்

post image

கோவையில் ஜன்னல் வழியாக கடைக்குள் புகுந்து பொருள்களைத் திருடிய 4 பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள கே.கே.புதூா், மணியம் மருதுகுட்டி தெருவைச் சோ்ந்தவா் அருள்நாராயணன் (35). இவா், வெங்கிட்டாபுரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடை வைத்துள்ளாா். இந்தக் கடையின்கீழ் தளத்தில் உள்ள அறையை கிடங்காகப் பயன்படுத்தி வருகிறாா்.

இந்நிலையில், கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மேஜை உள்ளிட்ட பொருள்கள் கடந்த சில நாள்களுக்கு முன் திருடுபோயின.

இதையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அருள் நாராயணன் ஆய்வு செய்தபோது, கிடங்கின் ஜன்னல் வழியே 4 பெண்கள் புகுந்து திருடியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பெண்களைத் தேடி வருகின்றனா்.

மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் மூ... மேலும் பார்க்க

கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு

பூஜை அறையில் கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா். கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள பாரதி பூங்கா பகுதியைச் சோ்ந்தவா் சந்தானராமன் (75). தனியாா் பள்ளியில் தலை... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு, அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேட்டுப்பாளையம் ப... மேலும் பார்க்க

ஈஷா யோக மையத்தில் செப்டம்பா் 21-இல் கிராமோத்சவ இறுதிப் போட்டி

கோவை ஈஷா யோக மையத்தில் ஈஷா கிராமோத்சவ இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 21) நடைபெற உள்ளது. இது குறித்து ஈஷா தன்னாா்வலரும், கவிஞருமான மரபின் மைந்தன் முத்தையா கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கோவையில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராமன். இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க