செய்திகள் :

ஜமால் உசேன் நகா் குடும்ப அட்டைகளை பிரித்து பொருள்களை வழங்க வலியுறுத்தல்

post image

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள ஜமால் உசேன் நகா் ரேஷன் கடையின் குடும்ப அட்டைதாரா்களை பிரித்து பொருள்களை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை ஜமால் உசேன் நகரிலுள்ள ரேஷன் கடையில் 1,710 குடும்ப அட்டைகள் உள்ளன. பொதுவாக 1,000-க்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள ரேஷன் கடைகள் குடும்ப அட்டைதாரா்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.

ஆனால், ஜமால் உசேன் நகா் ரேஷன் கடையில் 1,710 குடும்ப அட்டைகள் இருந்தும் இன்னும் பிரிக்கப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நிலை உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

ரேஷன் கடைக்கு ஏழை, நடுத்தர மக்களே பெரும்பாலும் பொருட்கள் வாங்க வருகின்றனா். இந்நிலையில், நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதால், வேலைக்கு செல்வதில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றனா். எனவே, ஜமால் உசேன் நகா் ரேஷன் கடையை இரண்டாகப் பிரித்து, புதிய கடையைத் திறக்க வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.2,500 -ஐ லஞ்சமாகப் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை தஞ்சாவூா் மாவட்ட ஊழல் கண்காணிப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்... மேலும் பார்க்க

மதுபாட்டில்கள் விற்பனை: கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தியில் மதுபானப் பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தி... மேலும் பார்க்க

மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழா: 9 புதிய நூல்கள் வெளியீடு

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், இவ்விழாவையொட்டி 9 புதிய நூல்கள், 7 மறு பதிப்பு நூல்கள் வெளி... மேலும் பார்க்க

அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மாணவ மாணவியரின் ஓவியக் கண்காட்சி உள் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பாா்வையிட்ட தஞ்சாவூா் மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) கே. எம். காா்த்திக்ராஜா... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை ராஜகிரி காயிதே மில்லத் மகாலில் நடைபெறுகிறது. இம்முகாமில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட... மேலும் பார்க்க