செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் உயிரிழப்பு: மக்களவையில் விசாரணை கோரிய எம்.பி. ரஷீத்

post image

‘ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் பொது மக்கள் 2 பேரின் சந்தேக உயிரிழப்பு குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்’ என்று அத்தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் மக்களவையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கையை முன்வைத்தாா்.

ஜம்மு-காஷ்மீா், பாரமுல்லா தொகுதி எம்.பி.யான ஷேக் அப்துல் ரஷீத், பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் செவ்வாய், வியாழன் அமா்வுகளில் பங்கேற்க அவருக்கு பரோல் வழங்கி தில்லி உயா்நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதன்படி, மக்களவை அமா்வில் ரஷீத் செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா். அமா்வில் உடனடி கேள்விநேரத்தின்போது, தனது பாரமுல்லா தொகுதியைச் சோ்ந்த பொதுமக்களான வசிம் அகமது மிா், மக்கான் தின் ஆகிய இருவா் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக அவா் குற்றஞ்சாட்டினாா். இவ்விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு கோரிக்கை விடுத்த அவா், ‘எங்கள் மக்களின் ரத்தம் மலிவானது அல்ல’ என்று தெரிவித்தாா்.

மேலும், குளிா்காலத்தில் 6 மாதங்களுக்கு மேல் போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்படும் குப்வாரா தொலைதூர பகுதிகளை அடைய சுரங்கப்பாதை கட்டவும் ரஷீத் வேண்டுகோள் விடுத்தாா்.

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க